Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
    உலகம்

    நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல்.

    நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் தாக்குதல் நடந்துள்ளது.

    காவல் துறையின் வசம் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண் கண்ணாடி அணிந்த படி நீல நிற ஆடை அணிந்திருந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கி உடன் அலுவலக கட்டிடத்தில் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதை நியூயார்க் காவல் துறையும், அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

    அயர்லாந்தின் தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகமும் இந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அங்கிருந்த நாற்காலிகள் மாதிரியான பொருட்களை பயன்படுத்தி கொண்டுள்ளனர். சினிமா படங்களில் வரும் காட்சியை போல கட்டிடத்தில் இருந்த மக்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தியபடி ஒவ்வொருவராக அந்த கட்டிடத்தில் இருந்து வெளிவந்தனர். இதுவும் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவாக வெளியாகி உள்ளது.

    தாக்குதல் நடத்தியவர் யார்? – இந்த தாக்குதலை லாஸ் வேகாஸ் பகுதியை சேர்ந்த ஷேன் தமுரா என்பவர் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு பிறகு தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். அவரது உடலில் இருந்த துப்பாக்கிச் சூட்டின் காயம் அதை உறுதி செய்வதாக போலீஸார் கூறியுள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் ஷேன் தமுரா ஹவாயில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. லாஸ் வேகாஸுக்கு குடிபெயர்ந்த அவருக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர்.

    தனியார் நிறுவன துப்பறிவாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார் தமுரா. அவரது துப்பறிவாளர் உரிமம் காலாவதியாகி உள்ளது. அவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இந்த தாக்குதலால் அந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் பயத்தில் உறைந்தனர். முதலில் கூட்டத்தில் ஏதோ பீதி ஏற்பட்டது போல இருந்ததாகவும். அதன் பின்னர்தான் துப்பாக்கிச் சூடு என தெரியவந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். தாக்குதலை அடுத்து நியூயார்க் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

    December 1, 2025
    உலகம்

    சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?

    December 1, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளி பிபிசி குழு உறுப்பினர் ஷுமீத் பானர்ஜி ராஜினாமா செய்தார், ‘ஆட்சி சிக்கல்களை’ மேற்கோள் காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

    December 1, 2025
    உலகம்

    பாஸ்டனில் விமானத்தின் நடுவே போர்க்கால் இரண்டு வாலிபர்களை குத்திய இந்திய மாணவர் மீது குற்றச்சாட்டு; 10 ஆண்டுகள் வரை, $250,000 அபராதம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரவு உணவு, சிறந்த ஆரோக்கியம்: உங்கள் உணவை மாலை 6-8 மணிக்கு மாற்றுவது எப்படி வளர்சிதை மாற்றத்தையும் தூக்கத்தையும் மேம்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு
    • டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து
    • இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.