Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?
    மாநிலம்

    நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

    adminBy adminJuly 29, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது.

    உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​வ​தாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு வழக்​கறிஞர் எஸ்​.​வாஞ்​சி​நாதன் புகார் அனுப்​பி​யிருந்​தார். இந்​தப் புகார் வழக்​கறிஞர்​கள் வாட்​ஸ்​அப் குழு​வில் வைரலானது.

    இந்​நிலை​யில் தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக பேராசிரியர் நியமனம் தொடர்​பான மேல்​முறை​யீடு மனு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் ஜூலை 25-ல் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மேல்​முறையீட்டு வழக்​கில் 3-வது எதிர்​மனு​தா​ரரின் வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதனை, நீதி​மன்​றத்​தில் ஆஜராக நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

    அதன்​படி வாஞ்​சி​நாதன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். அவரிடம் எங்​கள் இரு நீதிப​தி​களில் ஒரு​வர் (ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்) சாதி பாகு​பாடுடன் செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளீர்​கள். அதே நிலைப்​பாட்​டில்​தான் தற்​போதும் உள்​ளீர்​களா? எனக் கேள்வி எழுப்​பினர். அதற்​கு, நீதித்​துறை மீதான குற்​றச்​சாட்டு குறித்து எழுத்​துப்​பூர்வ உத்​தரவு பிறப்​பித்​தால் பதில் அளிப்​ப​தாக வாஞ்சிநாதன் தெரி​வித்​தார்.

    இதையடுத்து நீதிபதி சாதிரீ​தி​யாகச் செயல்​படு​வ​தாகக் கூறப்​பட்ட குற்​றச்​சாட்டு குறித்து நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்க உத்தர​விட்டு விசா​ரணையை ஜூலை 28-க்கு நீதிப​தி​கள் ஒத்​தி​வைத்​தனர். இதற்​கிடையே, வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நீதிமன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுப்​ப​தைக் கைவிடு​மாறு உயர் நீதி​மன்ற ஓய்​வு​ பெற்ற நீதிப​தி​கள் கே.சந்​துரு, டி.ஹரிபரந்​தாமன், சி.டி.செல்​வம், அக்​பர்​அலி, பி.கலை​யரசன், எஸ்​.​விமலா, எஸ்​.எஸ்​.சுந்​தர் ஆகியோர் உயர் நீதி​மன்ற அமர்​வுக்கு வேண்​டு​கோள் விடுத்​தனர்.

    வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கை​யைக் கைவிடு​மாறு கோரிக்கை வைத்​தன. இந்​நிலை​யில், வாஞ்​சி​நாதன் வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. வாஞ்​சி​நாதன் ஆஜராகி விளக்க அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​தார். அப்​போது, தமிழக முதல்​வருக்கு பல்​கலைக்​கழக வேந்​தருக்​கான அதி​காரம் வழங்​கும் சட்​டத்​துக்கு தடை கோரிய வழக்​கில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் அமர்வு நடத்​திய விசா​ரணையை வாஞ்​சி​நாதன் விமர்​சனம் செய்து பேசிய வீடியோ ஒளிபரப்​பப்​பட்​டது.

    ‘இந்த வீடியோ​வில் நீதித்​துறையைக் கடுமை​யாக விமர்சித்து கருத்து தெரி​வித்​துள்​ளீர்​கள். அதற்கு என்ன பதில் சொல்​கிறீர்​கள்?’ என வாஞ்​சி​நாதனிடம் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் கேட்​டார். அதற்கு வாஞ்​சி​நாதன், ‘வீடியோ​வில் எப்​படி வேண்​டு​மா​னாலும் மாற்​றம் செய்​ய​லாம், வீடியோவை ஒளிபரப்பி அதற்கு விளக்​கம் கேட்​பது முறையல்ல. வீடியோ தலைப்​புக்கு நான் பொறுப்​பல்ல. எழுத்​துப்​ பூர்​வ​மாகக் கேட்​டால் பதில் அளிக்​கிறேன்.

    மேலும் உங்​கள் (ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்) மீது நான் தெரி​வித்த புகாரை நீங்​களே விசா​ரிக்க முடி​யாது’ என்​றார். அதற்கு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ‘நாங்​கள் தலைமை நீதிப​திக்கு புகார் அனுப்​பியது குறித்து விசா​ரிக்​க​வில்​லை. நீங்​கள் வைத்த குற்​றச்​சாட்​டில் தற்​போதும் அதே நிலை​யில் இருக்​கிறீர்​களா? என விளக்​கம் கேட்​கத்​தான் அழைத்​தோம். அதற்​குள் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுத்​த​தாக நீங்​களும், உங்​கள் பின்​னால் இருப்​பவர்​களும் பேசி வரு​கிறார்​கள்.

    நீங்​கள் என்​னுடைய தீர்ப்பை விமர்​சிப்​ப​தற்கு நூறு சதவீதம் உரிமை உள்​ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்​கிறேன். ஆனால், சாதி பாகு​பாட்​டுடன் தீர்ப்​பளிப்​ப​தாகக் குற்​றம்​சாட்​டு​வது என்​பது வித்​தி​யாச​மானது. அதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. நாங்​கள் ஒன்​றும் முட்​டாள்​கள் அல்ல. இதை உங்​களு​டன் இருக்​கும் வழக்​கறிஞர்​களிட​மும், ஓய்​வு​பெற்ற நீதிப​தி​களிட​மும் கூறுங்​கள். எனது நீதித்​துறை செயல்​பாட்​டில் யாரும் தலை​யிட முடி​யாது.

    தொடர்ந்து 4 ஆண்​டு​களாக நீதித்​துறையை, நீதிப​தி​களை விமர்​சனம் செய்து வரு​கிறீர்​கள்? சமூக வலை​தளங்​களில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​கிறார் எனக் கூறி​யுள்​ளீர்​கள். அது உண்மை என்​றால் நீதி​மன்ற அவம​திப்​பு​தான். என்ன பதில்சொல்​லப் போகிறீர்​கள்?’ எனக் கேட்​டனர்.அதற்கு வாஞ்​சி​நாதன், ‘எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தர​விட்​டால், பதிலளிக்​கத்தயார்’ என்​றார். பின்​னர் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ‘வாய்​மொழி​யாகப் பதில் அளித்​தால்​போதும். பதிலளிக்​கத் தயங்​கு​வது ஏன்?’ என்​றார்.

    இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு வருமாறு:வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன், தமிழக பல்​கலைக்​கழக வேந்​தர் அதிகாரத்தை முதல்​வருக்கு மாற்றி பிறப்​பித்த சட்​டத்தை எதிர்த்​து தொடரப்​பட்ட வழக்​கில் நீதி​மன்​றம் பிறப்பித்த உத்​தரவை விமர்​சித்​தும், பொது ஊடகங்​களில் நீதித்​துறையை விமர்​சித்​தும் பேசி​யுள்​ளார். முந்​தைய விசா​ரணை​யின்​போது இதுகுறித்து விளக்​கமளிக்க வாஞ்​சி​நாதன் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டது. அதன்​படி அவர் ஆஜரா​னார்.

    அப்​போது அவர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும் என மிரட்​டப்​பட​வில்​லை. அவர் மீது நீதி​மன்ற அவம​திப்பு எடுக்​கப்​ப​டாத நிலை​யில், இதில் தலைமை நீதிபதி தலை​யிட வேண்​டும் என ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள் கோரியது துர​திருஷ்ட​வச​மானது. இன்​றும் வாஞ்​சி​நாதன் உரிய பதில் அளிக்​க​வில்​லை. அவரின் செயல்​பாடு நீதி​மன்ற அவம​திப்பு என கருதுகிறோம்​. எனவே, அவர்​ மீது நடவடிக்​கை எடுக்​க உயர்​ நீதி​மன்​ற தலை​மை நீதிப​திக்​குப்​ பரிந்​துரைக்​கிறோம்​. இவ்​வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேரிடமும் விசாரித்தால் செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்

    July 30, 2025
    மாநிலம்

    மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்

    July 30, 2025
    மாநிலம்

    சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்

    July 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆக. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    July 30, 2025
    மாநிலம்

    பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

    July 30, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேரிடமும் விசாரித்தால் செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்
    • மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்
    • தினமும் எவ்வளவு காய்கறி உட்கொள்ளல் தேவை? சிறந்த செயல்பாட்டு மருத்துவ மருத்துவர் எடை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்
    • ஊராட்சி பகுதியில் தொழில் தொடங்க உரிம கட்டணம் மாற்றியமைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.