Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்
    மாநிலம்

    சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

    அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.

    தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வந்​தனர். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​வாறு அரசு அலு​வல்​களை முதல்​வர் மேற்​கொண்டு வந்​தார்.

    இந்​நிலை​யில், நேற்று மாலை சுமார் 6 மணி​யள​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். மருத்​து​வ​மனை வளாகத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்ட பலர் முதல்​வரை வரவேற்​றனர். மருத்​து​வ​மனை​யில் இருந்து தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலையில் உள்ள இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வரை, சாலை​யின் இரு​புற​மும் திரண்டு இருந்த பொது​மக்​கள், கட்​சி​யினர் வரவேற்​றனர்.

    இதைத்தொடர்ந்து முதல்​வர் ஸ்​டா​லின் வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: நலம் பெற்று வீடு திரும்​பினேன். மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த போது அக்​கறை​யுடன் விசா​ரித்​து, நலம் பெற வாழ்த்​திய அனைத்து அரசி​யல் இயக்க தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், நீதிப​தி​கள், அரசு அதி​காரி​கள், திரை கலைஞர்​கள் என் உயிரோடு கலந்​திருக்​கும் அன்பு உடன்​பிறப்​பு​கள் உள்​ளிட்ட தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

    மருத்​து​வ​மனை​யில் சிறப்​பான சிகிச்சை அளித்​து, நான் விரைந்து நலம்​பெற உறு​துணை​யாய் இருந்த மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மீண்​டும் அன்​பும், நன்​றி​யும். உங்​களுக்​காக உழைப்பை வழங்​கும் என் கடமையை என்​றும் தொடர்​வேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

    முன்​ன​தாக, அப்​போலோ மருத்​து​வ​மனை மருத்​துவ சேவை​கள் இயக்​குநர் மருத்​து​வர் பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​து​வர் செங்​குட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழு​மை​யாக குணமடைந்த முதல்​வர் இல்​லம் திரும்​பு​கிறார். முதல்​வர் நலமாக இருக்​கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்​னர் வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​துள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    July 28, 2025
    மாநிலம்

    தமிழகத்​தின் வளர்ச்​சி திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமரிடம் தங்கம் தென்னரசு வழங்குவார்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    July 28, 2025
    மாநிலம்

    அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டிஜிபி அலுவலகம் விளக்கம்

    July 28, 2025
    மாநிலம்

    இபிஎஸ் ‘குட்டி மீட்’, மேடையில் திருமா… மோடி விசிட் ‘அரசியல்’ தருணங்கள்!

    July 28, 2025
    மாநிலம்

    தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

    July 28, 2025
    மாநிலம்

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கம்போடியா – தாய்லாந்து இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை: மலேசியாவில் இன்று நடக்கிறது
    • பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    • மன்னர் சார்லஸின் கோட்ஸன் ஹக் க்ரோஸ்வெனர் தனது முதல் குழந்தையை வரவேற்கிறார்- இளவரசர் வில்லியம் அல்லது இளவரசர் ஹாரி ராயல் காட்பாதராக தேர்ந்தெடுக்கப்படுவார்களா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உ.பி. கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் கூட்ட நெரிசல்: 2 பேர் பலி
    • மையப்புள்ளியாக ‘பிளாக்மெயில்’! – இயக்குநர் மு.மாறன் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.