Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ – கங்குலி கருத்து
    விளையாட்டு

    ‘ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ – கங்குலி கருத்து

    adminBy adminJuly 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ – கங்குலி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.

    இந்நிலையில், இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அண்மையில் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணி உடன் விளையாட மறுத்தது போன்றவற்றை முன்வைத்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இரு நாடுகளும் பொதுவான இடத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் என்ற ஒப்பந்தம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    “இந்திய வீரர்கள் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியைப் புறக்கணித்தனர். அதைத் தேசியக் கடமை என்று வர்ணித்தனர். இப்போது பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டியில் ஆடுவது நன்றாக உள்ளதா? உங்களுக்கு தேவையென்றால் தேசப்பற்று என்று சொல்வது. முதலில் இந்த போக்கை நிறுத்துங்கள். விளையாட்டு விளையாட்டாகவே இருக்கட்டும்; பிரச்சாரமாக வேண்டாம்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து கங்குலி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

    கங்குலி கருத்து: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுவதுதான் சரி என நினைக்கிறேன். ஆட்டம் விளையாடப்பட வேண்டும். அதேநேரத்தில் பஹல்காம் மாதிரியான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற கூடாது. தீவிரவாதம் கூடாது. அது நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால், அது கடந்த காலம்” என கங்குலி கூறியுள்ளார்.

    கடைசியாக கடந்த 2012-13ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தன. அதன் பின்னர் இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஆசிய கோப்பையில் பாக். உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும்: முன்னாள் ஆர்சிபி வீரர்

    July 28, 2025
    விளையாட்டு

    ஜடேஜா, வாஷி அபார சதம்: டிராவில் முடிந்த மான்செஸ்டர் போட்டி!

    July 27, 2025
    விளையாட்டு

    “தேவையெனில் மட்டும் தேசப்பற்று…” – பிசிசிஐ மீது டேனிஷ் கனேரியா தாக்கு

    July 27, 2025
    விளையாட்டு

    கில் 4-வது சதம் விளாசல்: டான் பிராட்மேன், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்!

    July 27, 2025
    விளையாட்டு

    அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

    July 27, 2025
    விளையாட்டு

    669 ரன்கள் குவித்த இங்கிலாந்து: 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி போராட்டம்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
    • 10 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு
    • ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு
    • ஆபரேஷன் சிந்தூர், ஷுபான்ஷு ஷுக்லா பற்றி பாடம்: என்சிஇஆர்டி.க்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.