Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்
    மாநிலம்

    மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்

    adminBy adminJuly 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாமக்கல்: மின்சார துறையைப்பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது. அவர் ஒரு டம்மி அமைச்சர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என அதிமுக முன்னள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

    நாமக்கல்லில் நேற்று (ஜூலை 26) இரவு திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மின் கட்டண உயர்வு பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் சொல்லி உள்ளார். அவர் பெயருக்கு தான் அமைச்சர் என்பது ஊர் உலகுக்கு நன்றாக தெரியும். அவர் மழைக்கு கூட மின்சார அலுவலகத்திற்கு சென்றதில்லை.

    பெயரளவுக்கு ஒரு நாள் மட்டும் சென்றுள்ளார். மற்றபடி அவருக்கு அத்துறையை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஒரு டம்மி அமைச்சர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது மின் கட்டண உயர்வுக்கு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதுதான் காரணம் என அமைச்சர்களும், மின்சாரத்துறை அமைச்சரும் திரும்ப திரும்ப சொல்கின்றனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது நான்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கடைசி மாநிலமாக தமிழகம் கையெழுத்திட்டது. அதற்கு இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஒன்று 3 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அதை நீக்க வேண்டும். அதுபோல் விவசாயத்திற்கு மீட்டர் வைக்க வேண்டும் என சொன்னார்கள். இவற்றையும் நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அப்போது தான் கையெழுத்திடுவோம் என கூறினார். அவற்றை எடுத்த பின் தான் நாங்கள் கையெழுத்திட்டோம். எங்கேயும் மின் கட்டணம் உயர்த்தபடும் என்பது அந்த சட்டத்தில் இல்லை.

    அப்படி இருந்திருந்தால் நான்காண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் உயர்த்தாமல் இருந்தோம். மீண்டும் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சர் ஒரு தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா? படித்துள்ளீர்களா? படித்துப் பார்த்து தான் சொல்கிறீர்களா? இதுதொடர்பாக பதிலளிக்க சட்டப்பேரவை அல்லது வெளியே எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்.

    அந்த திட்டத்தில் மின் கட்டண உயர்வு என்று எங்கு உள்ளது என்பதை காட்ட வேண்டும். உங்களுக்கு நிர்வாக திறமை இல்லாமல் மக்களை ஏமாற்றுவதற்காக, நீங்கள் கொள்ளையடிப்பதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது ஏற்கதக்கதல்ல. மக்கள் நம்ப மாட்டார்கள். இருந்தாலும் உதய் மின் திட்டம் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட திட்டம். எனினும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரு நிபந்தனைகளை விதித்ததால் தான் கையெழுத்திட்டோம். இவர்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு மாதிரியும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியும் பேசிக் கொண்டுள்ளனர்.

    விவசாயத்திற்கு மின் மீட்டரை நாங்கள் எப்போதும் வைக்கவில்லை. ஆனால் அவர்கள் இப்போது வைத்துக் கொண்டுள்ளனர். விவசாய சங்கங்கள் இதுபற்றி கேட்பதில்லை. மக்கள் விரோதமாக இவர் செயல்பட்டுக் கொண்டு எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்வதை தவிர்க்க வேண்டும்” என்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், வி.சரோஜா, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை: அன்புமணி

    July 29, 2025
    மாநிலம்

    கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஓபிஎஸ்

    July 29, 2025
    மாநிலம்

    கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்எல்ஏ – நடந்தது என்ன?

    July 29, 2025
    மாநிலம்

    “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்து தனிமை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர்” – ராஜேந்திர பாலாஜி கண்ணீர்

    July 29, 2025
    மாநிலம்

    நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

    July 29, 2025
    மாநிலம்

    பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை: அன்புமணி
    • உயர் யூரிக் அமில அளவு: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றைக் குறைக்க இயற்கை வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் மரணத்தை மூளை ஸ்கேன் கணிக்க முடியுமா? விஞ்ஞானிகள் இது சாத்தியம் என்று கூறுகிறார்கள், மேலும் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய நோய்களைக் கூட சுட்டிக்காட்டுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுகிறது: தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு
    • கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ஓபிஎஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.