Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, January 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு
    மாநிலம்

    முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு

    adminBy adminJuly 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் 5 பேர் முதி​யோர் இல்​லங்​கள் அல்​லது ஆதர​வற்​றோர் விடுதிக்​குச் சென்று அங்​கிருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​வழிப்​பதுடன், தங்​களது சந்த பணத்​தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்​லது இரவு உணவு வாங்​கிக்கொடுக்க வேண்​டுமென சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி பட்​டு​தே​வானந்த் உத்தரவிட்டார்.

    திருப்​பத்​தூர் மற்​றம் வேலூர் மாவட்​டத்​தில் தற்​காலிக அரசு வாகன ஓட்​டுநர்​களாக பணிபுரிந்த சி.சின்​னதம்​பி, எம்​. கிருஷ்ண​மூர்த்​தி, பி.ஆனந்​தன் ஆகியோரை பணிநிரந்​தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்​.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி சி.சர​வணன் உத்​தர​விட்​டிருந்​தார்.

    இதனை அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களான குமார் ஜெயந்த், எஸ்​.கே.பிர​பாகர், வி.​ராஜா​ராமன், பி.கு​மார​வேல் பாண்​டியன், டி.​பாஸ்கர பாண்​டியன் ஆகியோ​ருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி பட்​டு​தே​வானந்த் முன்​பாக நடந்​தது. அப்​போது சம்​பந்​தப்​பட்ட ஐஏஎஸ் அதி​காரி​களும் ஆஜராகி மனு​தா​ரர்​கள் 3 பேரும் கடந்​தாண்டு பணிநிரந்​தரம் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

    அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கே.​பாலு, 3 ஆண்​டு​கள் கால​தாமதத்​துடன் அது​வும் அவம​திப்பு வழக்கு தொடர்ந்த பிறகு பணிநிரந்தர உத்​தரவை நிறைவேற்​றி​யுள்​ளனர். இதனால் மனு​தா​ரர்​களின் பணிமூப்பு பாதிக்​கப்​பட்டு அவர்களுக்கு ஊதி​யம் போன்ற இதர பணப்​பலன்​களி​லும் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது என வாதிட்​டார்.

    அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த பணஇழப்பை சரிசெய்​யும் வகை​யில் 5 ஐஏஎஸ் அதி​காரி​களும் தலா ரூ.1.25 லட்​சம் வீதம் தங்​களது சொந்த பணத்தை மனு​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டும் என்​றார். அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பி.குமரேசன் இந்த உத்​தரவு அதி​காரி​களுக்கு கொஞ்​சம் கடின​மானது என்​றார்.

    அதையடுத்து நீதிபதி பட்​டு​தே​வானந்த் 5 பேரும் ஏதாவது முதி​யோர் இல்​லம் அல்​லது ஆதர​வற்​றோர் இல்​லம் சென்று சேவை செய்ய வேண்​டும் என உத்​தரவு பிறப்​பிக்​கலாமா என்​றார். அதற்கு ஐஏஎஸ் அதி​காரி​கள் சம்​ம​தித்து உத்​தர​வாத மனுக்​களை தாக்கல் செய்​தனர். அதையடுத்து நீதிபதி பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், 5 பேரும் நிபந்​தனையற்ற மன்​னிப்பு கோரி​யுள்​ளதுடன் சேவை செய்​கிறோம் என்​றும் உறு​தி​யளித்​துள்​ளனர்.

    எனவே அவர்​கள் 5 பேரும் இரு​வாரங்​களில் தங்​களது விருப்​பப்​படி அவர்​கள் பணிபுரி​யும் ஊரில் உள்ள ஏதாவது ஒரு முதி​யோர் இல்​லம் அல்​லது ஆதர​வற்​றோர் விடு​தி​யில் இருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​விட்​டு, தங்​களது சொந்த செல​வில் ஸ்பெஷல் மதிய உணவு அல்​லது இரவு உணவை வாங்கி கொடுத்து அவர்​களுக்கு தன்​னம்​பிக்கை ஏற்​படுத்த வேண்​டும்.

    இந்த சேவை குறித்து நீதித்​துறை பதி​வாளரிடம் ஆதா​ரங்​களு​டன் பிர​மாணப்​பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும். ஒரு​வேளை யாராவது இந்த உத்​தர​ வாதத்தை நிறைவேற்ற தவறி​னால் அவம​திப்பு வழக்கை உயர்நீதி​மன்​றம் மீண்​டும் வி​சா​ரிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டார். நீதிபதி பட்டு தேவானந்த் தற்​போது ஆந்​தி​ரா​வுக்​கு பணி​மாறு​தலாகி சென்​று விட்​டார்​ என்​பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எம்சி மேரி கோமின் மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவரது முன்னாள் கணவர் ஒன்லர் கோம் பதிலளித்து, “அவள் ஒரு விவகாரத்தில் இருந்தாள்…” – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காலப்போக்கில் உங்கள் குளிர்சாதன பெட்டியை மூடிமறைக்கும் உணவு சேதப்படுத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூமியின் மேலோடு மெதுவாக மத்திய துருக்கிக்கு அடியில் மூழ்கி வருகிறது, ஏன் என்று விஞ்ஞானிகளுக்கு தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எளிய வீட்டு வைத்தியம் மூலம் ஸ்வெட்டர்களில் இருந்து அசிங்கமான குமிழ்கள் அல்லது துணி மாத்திரைகளை அகற்றுவது எப்படி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வேகமான ஃபேஷன் எதுவும் இல்லை, 2026 இன் கூல்-கேர்ள் அப்கிரேட் ஏன் வட்ட வடிவ ஸ்டைல் ​​என்பது இங்கே

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.