Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?
    மாநிலம்

    ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?

    adminBy adminJuly 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘2026-ல் விஜய்தான் முதல்வர்’ என்ற ஒரே முடிவோடு களமிறங்கியிருக்கிறது தவெக. ஒருபக்கம் உறுப்பினர் சேர்க்கை, இணையவழி பிரச்சாரம் என தூள் கிளப்பினாலும், மறுபக்கம் பூத் கமிட்டி குளறுபடிகள், புஸ்ஸி ஆனந்த் ஸ்டிக்கர் என சொதப்பல்களும் தொடர்கதையாகி இருக்கிறது. வரும் தேர்தலுக்குள் அரசியல் பணிகளில் தவெக தேர்ச்சிப் பெற்றுவிடுமா எனப் பார்ப்போம்.

    சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கும் நிலையில், தவெக தரப்பு களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை 80 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாக சொல்கிறது தவெக வட்டாரம். உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியை வடிவமைத்து, அதற்கான பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    தவெக தனித்து போட்டியா, கூட்டணியா என இன்னும் முடிவாகாத நிலையில், செயற்குழு கூட்டத்தில் ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தை மக்களிடையே பிரபலமடைய செய்ய, தமிழகம் முழுவதும் வீடு வீடாக ஸ்டிக்கர் ஓட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரச்சாரத்தை தவெக வேகப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில்தான், ஸ்டிக்கர் விவகாரத்தால் கும்பகோணத்தில் பெரும் களேபரமே உருவாகியுள்ளது. அதாவது ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ எனும் ஸ்டிக்கரில் விஜய் படத்துக்கு சரிபாதி நிகராக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் படம் இடம்பெற்றது பெரும் சலசலப்பை உருவாக்கியது. இந்த விவகாரம் இணையத்திலும் பெரும் வைரலானது. ‘முதல்வர் விஜய்… துணை முதல்வர் ஆனந்த்’ என்பதால்தான் இருவரும் உள்ள படங்கள் ஒட்டப்படுகிறதா என ட்ரோல்கள் பறந்தன.

    இந்த விவகாரம் தலைமையையும் எட்டிய நிலையில், தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம்பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டது. இதனையடுத்து ஸ்டிக்கரில் ஆனந்த் படத்தை நீக்கி விட்​டு, விஜய் படம் மட்​டும் உள்ள புதிய ஸ்டிக்​கரை அக்கட்சியினர் அச்​சிட்​டு, வீடு​களில் ஏற்​கெனவே ஸ்டிக்​கர் ஒட்​டப்​பட்​டிருந்த ஸ்டிக்​கருக்கு மேல் ஒட்டி வரு​கின்​றனர்.

    அதேபோல, தவெக பூத் முகவர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளை முழுமைப்படுத்த வேண்டும் என சமீபத்தில் நடந்த தவெக செயற்குழுவில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பூத் கமிட்டி முகவர்கள் நியமனங்களை முடித்து, மாவட்ட நிர்வாகிகள் தலைமையிடம் பட்டியலை வழங்கினர். அந்தப் பட்டியலை ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய விஜய், முகவர்கள் நியமனத்தில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதை கண்டறிந்தார்.

    அதாவது, ஒருவர் இரண்டு, மூன்று பூத்களில் முகவராக இருப்பது, பூத்துக்கு தொடர்பில்லாதவர்களை முகவர்களாக நியமனம் செய்து கணக்கு காட்டியிருப்பது என தளபதிக்கே தண்ணி காட்டியுள்ளனர் தவெக நிர்வாகிகள். இதனால், அதிருப்தி அடைந்த விஜய், பூத் முகவர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பூத் முகவர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிகளை சரிசெய்து, ஒவ்வொரு பூத்திலும் சரியான நபர்களை மட்டும் முகவர்களாக நியமிக்க வேண்டும் எனவும் கறார் காட்டியுள்ளார்.

    தேர்தலுக்கு தயார்படுத்தும் விதமாக பூத் வாரியாக குழுக்கள், ஒன்றிய, தொகுதி வாரியாக கூட்டங்கள், மாவட்ட, மண்டல வாரியாக மாநாடு என அரசியல் கட்சிகள் இப்போதே பிஸியாகி விட்டன. ஆனால், பூத் கமிட்டிகளையே இன்னும் முறையாக அமைக்காவிட்டால் எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்ற கேள்வியும் கட்சிக்குள்ளேயே எழுந்துவிட்டது.

    அதுமட்டுமின்றி கட்சி கூட்டணியோடு களமிறங்குமா அல்லது தனித்து களமிறங்குமா என்பதற்கான தெளிவான பதிலும் இதுவரை தவெக தலைமையால் சொல்லப்படவில்லை. எனவே, எப்படி தேர்தலுக்கு தயாராவது என்ற கேள்வியும் இப்போது வரை மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.

    கூட்டணி அமைத்தாலும் சரி, தனித்துப் போட்டியிட்டாலும் சரி , இப்போதே தொகுதி வாரியாக தேர்தலில் போட்டியிட தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை பெரும்பாலான கட்சிகள் தயார் செய்து விட்டன. அதுபோன்ற பணிகளை மேலிடம் தொடங்கிவிட்டதா என்ற தெளிவு இல்லாமல் களத்தில் தவிக்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

    விஜய் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடுகிறது, இணையத்தில் விஜய் பேரை சொன்னால் விசில் பறக்கிறது. ஆனால், களத்தில் என்ன நடக்கிறது என்பதுதான், தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது. அந்த வகையில், ‘முதல்வர் வேட்பாளர்’ கனவில் இருக்கும் விஜய், அதற்கேற்ப களத்தை தயார்படுத்துகிறாரா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

    July 27, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திருமாவும் விரும்புகிறாரா? – காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதில்

    July 27, 2025
    மாநிலம்

    திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு – பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு

    July 27, 2025
    மாநிலம்

    திமுகவின் 541 வாக்குறுதிகளில் 60 மட்டுமே நிறைவேற்றம்: நடைபயணத்தில் அன்புமணி குற்றச்சாட்டு

    July 27, 2025
    மாநிலம்

    பிஹார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    July 27, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பழனிசாமி சந்திப்பு!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தலைவன் தலைவி – திரை விமர்சனம்
    • திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
    • ரூ.24 லட்சம் மோசடி: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
    • திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திருமாவும் விரும்புகிறாரா? – காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதில்
    • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.