Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு
    மாநிலம்

    “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு

    adminBy adminJuly 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் நலனில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பழைய ஓய்வூதிய திட்ட இயக்ககத்தின் தேசிய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் கடுமையாக விமர்சித்தார்.

    அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான தேசிய இயக்ககத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, “இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், தொழிலாளர் நலனிலும், அரசு ஊழியர் பாதுகாப்பிலும் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தராத ஒரே மாநிலம் தமிழகம்தான்.

    அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் தராதது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசு ஊழியர்களுக்கு இதர மாநிலங்களைப் போன்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அடுத்த கட்டபோராட்டம் குறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் எங்கெல்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதம் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, அக்டோபரில் மறியல் போராட்டம் நடைபெறும். நிறைவாக, நவம்பர் 15-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் திரட்டி மிகப் பெரிய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் ஒரே ஒரு அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்திவிடலாம். ஓய்வூதியம் தொடர்பாக குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை ஆகும். அதை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, இனியும் காலம்தாழ்த்தாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திருமாவும் விரும்புகிறாரா? – காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதில்

    July 27, 2025
    மாநிலம்

    திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு – பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு

    July 27, 2025
    மாநிலம்

    திமுகவின் 541 வாக்குறுதிகளில் 60 மட்டுமே நிறைவேற்றம்: நடைபயணத்தில் அன்புமணி குற்றச்சாட்டு

    July 27, 2025
    மாநிலம்

    பிஹார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    July 27, 2025
    மாநிலம்

    திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பழனிசாமி சந்திப்பு!

    July 27, 2025
    மாநிலம்

    அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரேமாதிரி மின்கட்டணமே நிர்ணயம்: தமிழக அரசு விளக்கம்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.24 லட்சம் மோசடி: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
    • திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திருமாவும் விரும்புகிறாரா? – காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதில்
    • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி
    • ராணுவத்தினருக்கு சட்ட உதவிகள் அளிக்கும் திட்டம் தொடக்கம்
    • ‘டாக்ஸிக்’ படத்துக்காக ஆக்‌ஷன் காட்சியில் பங்கு பெற பயிற்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.