Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்

    adminBy adminJuly 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது. 72,743 பேர் விண்ணப்பித்தனர்.

    இந்நிலையில், தரவரிசை பட்டியலை சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் 39,853 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4,062 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் 30,428 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். சேலம் அபினீத் நாகராஜ் (655 மதிப்பெண்), திருப்பூர் ஹிருத்திக் விஜயராஜா (653) ஆகியோர் 2 ,3-ம் இடங்களை பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கள்ளக்குறிச்சி திருமூர்த்தி (572), கிருஷ்ணகிரி சதீஷ்குமார் (563), கள்ளக்குறிச்சி மதுமிதா (551) முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

    ‘‘பிறப்பு, இருப்பிட சான்று போன்ற ஆவணங்களை போலியாக வழங்கிய 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் குறையவில்லை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடங்கும்’’ என அமைச்சர் கூறினார்.

    கூடுதல் விவரங்களை tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் அறியலாம். பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கை: ஜெஇஇ தேர்வுக்கு நவ.27-க்குள் விண்ணப்பம்

    December 1, 2025
    கல்வி

    15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை

    December 1, 2025
    கல்வி

    எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வுகள்: இன்று இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியீடு

    December 1, 2025
    கல்வி

    கோவை மாணவி ரிதன்யா அசத்தல்: மாணவர்களுக்கு துணைபுரியும் இணையதளம் அறிமுகம்

    December 1, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    December 1, 2025
    கல்வி

    நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் 

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை
    • ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கை: ஜெஇஇ தேர்வுக்கு நவ.27-க்குள் விண்ணப்பம்
    • ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்!
    • சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?
    • சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.