Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வழக்​கறிஞர்​கள் மீது கட்​சிக்​காரர்​கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகி விடக்​கூ​டாது – பணி ஓய்வு பெறும் நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை
    மாநிலம்

    வழக்​கறிஞர்​கள் மீது கட்​சிக்​காரர்​கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகி விடக்​கூ​டாது – பணி ஓய்வு பெறும் நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை

    adminBy adminJuly 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வழக்​கறிஞர்​கள் மீது கட்​சிக்​காரர்​கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகி விடக்​கூ​டாது – பணி ஓய்வு பெறும் நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​கள் மனை​வியை விட தங்​களது வழக்​கறிஞர்​களைத்​தான் அதி​கம் நம்புகின்றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாக்கி​விடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​. சுப்பிரமணி​யன் அறி​வுறுத்​தி​னார்.

    சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெற்​ற​தால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் நடை​பெற்​றது. விழாவுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​. ராமன் பேசுகை​யில், நீதிபதி ஆர்.சுப்​பிரமணி​யன் கடந்த 9 ஆண்​டு​களில் 37 ஆயிரம் வழக்​கு​களை விசா​ரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்​டிப் பேசி​னார்.

    இந்​நிகழ்​வில் சக உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அரசு வழக்​கறிஞர்​கள், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள், வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை ஊழியர்​கள் திரளாக பங்​கேற்​றனர்.

    இந்​நிகழ்​வில் நீதிபதி ஆர்​. சுப்​பிரமணி​யன் ஏற்​புரை​யாற்றி பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 33 ஆண்​டு​கள் வழக்​கறிஞ​ராக​வும், நீதிப​தி​யாக​வும் பணி​யாற்​றிய முழுத் ​திருப்​தி​யுடன் விடை​பெறுகிறேன். நீதிப​தி​களும், வழக்​கறிஞர்​களும் வரு​வார்​கள், போவார்​கள்.

    ஆனால் உயர் நீதி​மன்​றம் என்​பது நிரந்​தர​மான அமைப்​பு. ஜனநாயகம் என்ற தேரில் நீதிப​தி​களும், வழக்​கறிஞர்​களும் இருசக்கரங்​கள். நீதி பரி​பாலனத்​துக்கு இந்த இரு​வரும் முக்​கிய​மானவர்​கள்.

    வழக்​கறிஞர்​கள் வழக்கு விவரங்​களை முழு​மை​யாகப் படித்​து​விட்டு விசா​ரணைக்கு தயா​ராக வந்​தால்​தான் நீதிப​தி​கள் கேட்​கும் எந்த கேள்வி​களுக்​கும் அவர்​களால் பதிலளிக்க முடி​யும். சில நேரங்​களில் வழக்கு கட்​டு​களை படிக்​காமல் விசா​ரணைக்கு ஆஜராகும் வழக்​கறிஞர்​களை நானும் கடிந்து கொண்​டதுண்​டு.

    வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​களது மனை​வியை விட தனது வழக்​கு​களை நடத்​தும் வழக்​கறிஞர்​களைத்​தான் பெரி​தாக நம்​பு​கின்​றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாகி​விடக்​கூ​டாது” என்​றார். நீதிபதி ஆர்​.சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெறு​வதன் மூலம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் உள்ள நீதிப​தி​களின் எண்​ணிக்கை 55 ஆக குறைந்​து, காலி​யிடங்​களின்​ எண்ணிக்​கை 20 ஆக உயர்ந்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

    July 27, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி!

    July 27, 2025
    மாநிலம்

    “சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு” – காங். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வேலுச்சாமி காட்டம்

    July 27, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனை சென்றது ஏன்? – தமிழிசைக்கு மா.சுப்பிரமணியன் பதில்

    July 27, 2025
    மாநிலம்

    முதல்வர் பதவியில் அதிக நாட்கள் – பழனிசாமியை முந்திய மு.க.ஸ்டாலின்!

    July 27, 2025
    மாநிலம்

    இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தேவையெனில் மட்டும் தேசப்பற்று…” – பிசிசிஐ மீது டேனிஷ் கனேரியா தாக்கு
    • முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
    • ஜிம் இல்லை, செயலிழப்பு உணவு இல்லை: கபில் சர்மா வெறும் 63 நாட்களில் வெறும் 1 விதியுடன் 11 கிலோவை இழந்தார் – இந்தியாவின் நேரங்கள்
    • தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி!
    • “சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு” – காங். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வேலுச்சாமி காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.