Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடி உப்பள தொழிலாளி காவல் உயிரிழப்பு வழக்கு: டிஎஸ்பி, 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
    மாநிலம்

    தூத்துக்குடி உப்பள தொழிலாளி காவல் உயிரிழப்பு வழக்கு: டிஎஸ்பி, 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடி உப்பள தொழிலாளி காவல் உயிரிழப்பு வழக்கு: டிஎஸ்பி, 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​வி​சா​ரணை​யின்​போது தூத்​துக்​குடி உப்​பளத் தொழிலாளி உயி​ரிழந்த வழக்​கில் டிஎஸ்பி மற்​றும் 3 காவலர்​களுக்கு விதிக்கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்​தி வைக்​க​வும், ஜாமீன் வழங்​க​வும் உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

    தூத்​துக்​குடி மாவட்​டம் மேல அலங்​காரத்​தட்டு பகு​தி​யைச் சேர்ந்தவர் வின்​சென்ட். உப்​பளத் தொழிலா​ளி​யான இவரை நாட்டு வெடிகுண்டு வழக்கு விசா​ரணைக்​காக 1999 செப். 17-ம் தேதி தாள​முத்​து நகர் காவல் நிலை​யத்​துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்றனர். காவல் நிலை​யத்​தில் போலீ​ஸார் வின்​சென்ட்டை தாக்​கி​யுள்​ளனர். இதில் வின்​சென்ட் உயி​ரிழந்​தார்.

    வின்​சென்ட்டை போலீ​ஸார் அடித்​துக் கொலை செய்​த​தாக அவரது மனைவி கிருஷ்ணம்​மாள், தாள​முத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்​தார். இது தொடர்​பாக தூத்​துக்​குடி கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பித்​தார்.

    பின்​னர் வின்​செட் மரணம் தொடர்​பாக தாள​முத்​துநகர் காவல் ஆய்​வாளர் சோமசுந்​தரம், காவலர்​கள் ஜெயசேகரன், ஜோசப்​ராஜ், பிச்​சை​யா, செல்​லத்துரை, வீர​பாகு, சிவசுப்​பிரமணி​யன், சுப்​பை​யா, ரத்​தின​சாமி, பாலசுப்​பிரமணி​யன், காவல் உதவி ஆய்​வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

    இந்த வழக்கு விசா​ரணை 25 ஆண்​டு​களாக நடை​பெற்று வந்த நிலை​யில், கடந்த ஏப். 5-ம் தேதி தூத்​துக்​குடி மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிபதி தாண்​ட​வன் தீர்ப்​பளித்​தார். வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட ராமகிருஷ்ணன் (ஸ்ரீவை​குண்​டம் டிஎஸ்​பி), சோமசுந்​தரம் (நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்​வாளர்), பிச்​சையா (நில அபகரிப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்​வாளர்), ஜெயசேகரன், வீர​பாகு, ஜோசப்​ராஜ், செல்​லத்​துரை, சுப்​பை​யா, பாலசுப்​பிரமணி​யன் ஆகியோ​ருக்கு ஆயுள் தண்​டனை​யும், தலா ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​பட்​டது. ஓய்வு பெற்ற காவலர்​கள் சிவசுப்​பிரமணி​யன், ரத்​தின​சாமி ஆகியோர் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

    இந்​நிலை​யில், ஆயுள் தண்​டனையை ரத்து செய்​யக்​கோரி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்​றும் காவலர்​கள் சுப்​பை​யா, ஜெயசேகரன், வீர​பாகு ஆகியோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர். இந்த மேல்​முறை​யீட்டு மனு விசா​ரணை முடி​யும் வரை ஆயுள் தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, ஜாமீன் வழங்​கக்​கோரி துணை மனு​வும் தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ்சந்​தி​ரா, ஆர்​.பூர்​ணிமா ஆகியோர் விசா​ரித்​தனர்.

    மனு​தா​ரர்​கள் சார்​பில், “வின்​சென்ட் விசா​ரணை​யின்​போது மனு​தா​ரர்​கள் காவல் நிலை​யத்​தில் இல்​லை. மனு​தா​ரர்​கள் தவறாக வழக்​கில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். சம்​பவம் நடை​பெற்று 25 ஆண்​டு​களுக்​குப் பிறகு தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

    அரசுத் தரப்​பில், “வின்​சென்ட் உயி​ரிழப்பு காவல் மரணம் என உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. விசா​ரணை நீதி​மன்​றம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​திய பின்​னரே தண்​டனை வழங்​கி​யுள்​ளது. சம்​பவத்​தின்​போது மனு​தா​ரர்​கள் காவல் நிலை​யத்​தில் இருந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, விசா​ரணை நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பில் தலை​யிட வேண்​டிய​தில்​லை” எனக் கூறப்​பட்​டது.

    இதையடுத்து நீதிப​தி​கள், “வின்​சென்ட் உடலில் 38 இடங்​களில் காயங்​கள் இருந்​த​தாக பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. வின்​சென்ட்​டுடன் விசா​ரணைக்கு அழைத்த இரு​வரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

    வின்​சென்ட்டை மட்​டும் காவல் நிலை​யத்​தில் இருந்து அனுப்​பி​யுள்​ளனர். வின்​சென்ட் காவல் நிலை​யத்​திலிருந்து வெளி​யேறிய நேரத்​துக்​கும், மருத்​து​வ​மனை​யில் அவர் இறந்​த​தாக அறிவிக்​கப்​பட்ட நேரத்​துக்​கும் இடையி​லான நேரம் மிக​வும் முக்​கிய​மானது.

    வழக்கு விசா​ரணை 25 ஆண்​டு​களாக நடை​பெற்​றதற்கு அரசு தரப்பை காரண​மாக கூற முடி​யாது. விசா​ரணை தாமதத்​துக்கு மனு தா​ரர்​கள்​தான் காரணம். விசா​ரணை நீதி​மன்​றம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​தியே மனு​தா​ரர்​களுக்கு தண்​டனை வழங்கியுள்ளது. எனவே, மனு​தா​ரர்​களின் தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, அவர்​களுக்கு ஜாமீன் வழங்க எந்த காரண​மும் இல்லை. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தரவிட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்

    September 11, 2025
    மாநிலம்

    தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்

    September 11, 2025
    மாநிலம்

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்

    September 11, 2025
    மாநிலம்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்

    September 11, 2025
    மாநிலம்

    “திமுக விளம்பர நாடகத்துக்கு அரசுப் பள்ளிகளும் பலிகடா…” – அண்ணாமலை சாடல்

    September 10, 2025
    மாநிலம்

    திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்
    • தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்
    • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்
    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.