Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை
    தேசியம்

    “எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் பிஹார் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபட்டுவிடக் கூடாது; அதேநேரத்தில் தகுதியற்ற எந்த வாக்காளரின் பெயரும் இடம்பெறவும் கூடாது என்பதே இதன் நோக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம், தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறது.

    இந்நிலையில், பிஹார் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன. பிஹாரில் சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

    மேலும், சட்டப்பேரவைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி பிரச்சினை செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியேயும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் உடனடடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி தேர்தலை புறக்கணிக்க தயங்காது. அதற்கான வாய்ப்பை நாங்கள் மூடிவிடவில்லை.

    தேர்தல் வெற்றியாளர் யார் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்போது, அப்படி ஒரு தேர்தலை நடத்துவதால் என்ன பயன் இருக்கிறது? பூத்-லெவல் அதிகாரிகள் வாக்காளர்கள் சார்பாக தங்கள் கையொப்பங்களையும் கட்டைவிரல் ரேகைகளையும் கணக்கெடுப்பு படிவங்களில் இடுகிறார்கள். படிவங்கள் குப்பை காகிதம் போல பயன்படுத்தப்படுகின்றன. இதனை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அரசியல் கருவியாக செயல்படுகிறது.” என்று குற்றம் சாட்டினார்.

    தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக கூட்டணியின் பிற கட்சிகளிடம் பேசப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த தேஜஸ்வி, “எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் நாங்கள் பேசுவோம்.” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்த தெளிவுப் பார்வைக்கு வாசிக்க > பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: காரணங்களும் விமர்சனங்களும்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு

    July 26, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

    July 26, 2025
    தேசியம்

    கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    July 26, 2025
    தேசியம்

    ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

    July 26, 2025
    தேசியம்

    பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

    July 26, 2025
    தேசியம்

    இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை: ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் தொடங்கி வைத்தார்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?
    • “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு
    • ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகள் விற்கப்படுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
    • முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.