Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் மெமு ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்: பெட்டிகளை அதிகரிக்க வேண்டுேகாள்
    மாநிலம்

    சென்னையில் மெமு ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்: பெட்டிகளை அதிகரிக்க வேண்டுேகாள்

    adminBy adminJuly 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் மெமு ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்: பெட்டிகளை அதிகரிக்க வேண்டுேகாள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னையில் இருந்து குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில்களில் ஒன்பது பெட்டிகளை இணைத்து இயக்குவதால், பயணிகள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லுார் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ‘மெமு’ வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    இவை அனைத்தும், 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இவை குறுகிய தூர பயணிகள் ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை நெரிசல் மிகுந்த “பீக் அவர்ஸ்” நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களை 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச்சங்க தலைவர் முருகையன் மற்றும் திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தினசரி வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    இதனால், ‘மெமு’ வகை ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பீக் அவர்ஸ் நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். தற்போது, அனைத்து மின்சார ரயில்களையும் 12 பெட்டிகளாக இயக்குவது வரவேற்கத்தக்கது.

    இதுபோல, குறுகிய தூரம் செல்லும் ‘மெமு’ வகை ரயில்களையும் 12 பெட்டிகளாக இயக்கினால், பயணிகள் நெரிசலின்றி செல்ல முடியும். கூடுதலான பயணிகளும் பயணிக்கலாம். இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது: அமைச்சர் தகவல்

    September 11, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்

    September 11, 2025
    மாநிலம்

    37 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக கூறுவது பொய்: பழனிசாமி குற்றச்சாட்டு

    September 11, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,275 கனஅடியாக சரிவு

    September 11, 2025
    மாநிலம்

    விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி

    September 11, 2025
    மாநிலம்

    நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அணி மாறி வாக்களித்தது நம்பிக்கை மோசடி: விசாரணை நடத்த மணீஷ் திவாரி கோரிக்கை
    • கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது: அமைச்சர் தகவல்
    • வீட்டில் பாதிப்பில்லாத தோற்றமுடைய அச்சு எவ்வாறு ஆரோக்கியத்தை ரகசியமாக பாதிக்கும் – இந்தியாவின் டைம்ஸ்
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்
    • ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.