Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரை சுரங்க பாதை பணி நிறைவு
    மாநிலம்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரை சுரங்க பாதை பணி நிறைவு

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரை சுரங்க பாதை பணி நிறைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித் தடத்​தில் ஒரு பகு​தி​யாக, பனகல் பூங்கா – கோடம்​பாக்​கம் வரை மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணி நிறைவடைந்​தது. இப்​பணி​யில் ஈடுபட்ட சுரங்​கம் தோண்​டும் இயந்​திர​மான “பீ​காக்” கோடம்​பாக்​கம் நிலை​யத்தை வெற்​றிகர​மாக வந்​தடைந்​தது.

    சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில், கலங்​கரை விளக்​கம்- பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.) முக்​கிய வழித்​தட​மாக உள்​ளது. இத்தடத்தில், கலங்​கரை விளக்​கம் – கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரை சுரங்​கப் பாதை​யாக​வும், கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் முதல் பூந்​தமல்லி பைபாஸ் வரை உயர்​மட்​டப் பாதை​யாக​வும் அமை​கிறது.

    தற்​போது, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை, உயர்​மட்​டப் பாதை பணி​கள் தீவிர​மாக நடை​பெறுகின்​றன. இந்த வழித்தடத்தில், கலங்​கரை விளக்​கம் நிலை​யத்​திலிருந்து கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரையி​லான 10.03 கி.மீ. தொலை​வுக்கு சுரங்கப் பாதை பணி நடை​பெறுகிறது. இதன் கட்​டு​மானப் பணி​களை ஐடிடி சிமென்​டேஷன் இந்​தியா நிறு​வனம் மேற்​கொள்கிறது. இதற்​காக, 4 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

    பனகல் பூங்கா – கோடம்​பாக்​கம் இடையே 2,047 மீட்​டர் நீளத்​துக்கு சுரங்​கப் பாதை அமைக்​கும் பணி​யில், பீகாக் (மயில்), பெலிகான் (நாரை) என பெயரிடப்​பட்​டுள்ள, 2 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இந்த இயந்​திரங்​கள் அடுத்​தடுத்து கோடம்​பாக்​கம் நிலை​யத்தை நெருங்கி வந்​தன.

    இந்​நிலை​யில், பனகல்​பூங்கா – கோடம்​பாக்​கம் நிலை​யம் வரை, பீகாக் என்ற சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் நேற்று பணியை வெற்​றிகர​மாக நிறைவு செய்​தது. இந்த இயந்​திரம், ஆற்​காடு சாலை​யில் மீனாட்சி கல்​லூரிக்கு அரு​கில் கோடம்​பாக்​கம் நிலையத்தை நேற்று வந்​தடைந்​தது.

    இந்​நிகழ்​வை, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், ஐடிடி சிமென்​டேஷன் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ஜெயந்த பாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை பொது மேலா​ளர்​கள் ரேகா பிர​காஷ் (திட்​ட​மிடல் மற்​றும் வடிவ​மைப்​பு), எஸ்​.அசோக் குமார் (வழித்​தடம் மற்​றும் உயர்​மட்ட கட்​டு​மானம்), தலைமை ஆலோ​சகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்​தவா (சுற்​றுச்​சூழல்), பொது மேலா​ளர் ஆர். ரங்​க​நாதன் (கட்​டு​மானம்) உள்பட பலர் கலந்து கொண்டு பார்​வை​யிட்டனர்.

    இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி​கள் கூறிய​தாவது: இரண்​டாம் கட்​டத்​தில் பனகல் பூங்கா மற்​றும் கோடம்​பாக்​கம் இடையி​லான இந்த சுரங்​கப் பாதை பிரிவு மிக​வும் நீள​மான பிரி​வாகும். இதில் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் பீகாக் (மயில்) 190 கட்​டிடங்​கள் வழி​யாக செல்ல வேண்​டி​யிருந்​தது. அவற்​றில், பெரும்​பாலும் குடி​யிருப்பு கட்​டிடங்​கள். அவற்​றில், 50-க்​கும் மேற்​பட்ட கட்​டிடங்​கள் பழைய கட்​டிடங்​கள்.

    மேலும், இந்த சுரங்​கப் பாதை இரண்டு தேவால​யங்​கள் வழி​யாக​வும், கோடம்​பாக்​கம் மேம்​பாலத்​துக்கு கீழே​யும் சென்​றது. சவால்கள் இருந்த போதி​லும், பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் எவ்​வித இடையூறும் இல்​லாமல் சுரங்​கப் பாதை பணியை நிறைவு செய்​ததுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி சொன்னது உண்மையே’ – டிடிவி தினகரன்

    September 11, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்!

    September 11, 2025
    மாநிலம்

    ‘இமானுவேல் சேகரனார் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளி’ – முதல்வர் ஸ்டாலின்

    September 11, 2025
    மாநிலம்

    அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    September 11, 2025
    மாநிலம்

    நோயாளிக்கு சக்கர நாற்காலி மறுப்பு விவகாரம்: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    September 11, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறுதான்: அமைச்சர் அன்பில் மகேஸ்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி சொன்னது உண்மையே’ – டிடிவி தினகரன்
    • உரத் தட்டுப்பாடு: தவிக்கும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள்!
    • 10 வயது இளையதைப் பாருங்கள்! உடற்பயிற்சி பயிற்சியாளர் ஆற்றல்மிக்க, ஆரோக்கியமான மற்றும் இளமையாக இருக்க வயதான எதிர்ப்பு உணவுகளை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யார் ஜான் பர்போர்ட்: முன்னாள் நாசா விஞ்ஞானி சுமார் million 1.2 மில்லியன் மதிப்புள்ள முதலீட்டு மோசடிக்கு சிறையில் அடைக்கப்பட்டார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.