Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மரபணு நெல் ரகங்கள், வனவிலங்கு பாதிப்பு குறித்து சட்டம் இயற்றக் கோரி டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    தேசியம்

    மரபணு நெல் ரகங்கள், வனவிலங்கு பாதிப்பு குறித்து சட்டம் இயற்றக் கோரி டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    adminBy adminJuly 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மரபணு நெல் ரகங்கள், வனவிலங்கு பாதிப்பு குறித்து சட்டம் இயற்றக் கோரி டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம் இயற்றவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    விவசாய அமைப்புகளின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2019 முதல் 2023 வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு பெறுவதில் கடுமையான சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    போராட்டம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஈசன் முருகசாமி கூறும்போது, “இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. இவை வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடியவை. மேலும் மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகளை உடையவை. பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்தவை. ஆனால் மத்திய அரசு இவற்றை கவனத்தில் கொள்ளாமல் மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகள் அதிக விலை கொடுத்து விதை நெல்லை வாங்குவதற்காக இது திணிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ள எவ்வித ஆய்வுகளும் இதில் நடைபெறவில்லை. இயற்கை வேளாண்மை, பாரம்பரிய ரகங்களை மேம்படுத்துதல், சிறுதானிய ஆண்டு என இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் அதே வேளையில் இதுபோன்ற இயற்கையை அழிக்கும் செயல்களை மத்திய அரசு அனுமதிப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் மனு கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    தேசியம்

    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிலோ ரூ.2 – தக்காளி விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் வேதனை
    • தரமான தூக்கம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக படுக்கைக்கு முன் திரைகளைத் தவிர்க்க எவ்வளவு காலம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்தேயு டவுட் யார்? சார்லி கிர்க் தனது சொந்த மரணத்திற்கு குற்றம் சாட்டுவதாகக் கூறியதைத் தொடர்ந்து எம்.எஸ்.என்.பி.சி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இமானுவேல் சேகரனார் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளி’ – முதல்வர் ஸ்டாலின்
    • கார்லோஸ் அல்கராஸின் சூப்பர்மாடல் காதலி ப்ரூக்ஸ் நாடரை சந்திக்கவும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.