Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில், கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு அனுமதி வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் கோயிலின் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும் பேரூர் பட்டீசுவரர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சர்ச்சைகள் எழுந்தன. இந்தச் செயலுக்கு சிவனடியாா்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று (ஜூலை 23) பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்து றையின் கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் தலைமை வகித்தார். கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் அங்குள்ள இணை ஆணையர் ரமேஷை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், ‘‘கடந்த 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, பட்டீசுவரர் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர், ஒருவர் தரிசனம் செய்ய வருகிறார். அவருக்காக பூட்டிய கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து மத ஆகம விதிகளின்படி, பூட்டிய கோயில் நடையை மறுநாள் தான் திறக்க வேண்டும். ஆனால், ஆகம விதிகளுக்கு புறம்பாக, பேரூர் பட்டீசுவரர் கோயிலின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கோயில்களில் இதுபோன்ற ஆகம விதிமீறல்கள் நடக்கக்கூடாது என இந்து சமுதாய மக்கள் விரும்புகின்றனர். எனவே, ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நடையை திறந்த அறநிலையத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட இணை ஆணையர், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மனு அளித்தவர்களிடம் உறுதியளித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    மாநிலம்

    பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

    September 12, 2025
    மாநிலம்

    திமுக முப்பெரும் விழா தேர்தல் திருப்புமுனையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

    September 12, 2025
    மாநிலம்

    பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’

    September 12, 2025
    மாநிலம்

    அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இதய நோய் அபாயத்தை உயர்த்தும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் எண்ணெய்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
    • விளையாட்டாளர்களில் ஹெட் சிண்ட்ரோம் கைவிடப்பட்டது: இளைஞர்களிடையே அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அபாயங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
    • எந்த 10 உருப்படிகள் நீங்கள் தினமும் தொடும் மிக மோசமானவை என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்; கை கழுவுதல் என்பது உங்கள் சிறந்த பாதுகாப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.