Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை தொடங்குகிறது இந்தியா!
    தேசியம்

    5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை தொடங்குகிறது இந்தியா!

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை தொடங்குகிறது இந்தியா!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் நாளை (ஜூலை 24) தொடங்குகிறது.

    இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவுக்கு ஜூலை 24 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீன குடிமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா கோரி பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய மாநகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் நேரில் சமர்ப்பித்து விசா பெறலாம். 2020-ம் ஆண்டு சுற்றுலா விசா சேவை நிறுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 2020 முதல் சீன நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், சீன முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. கோவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டும், சீன நாட்டினருக்கான விசா சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சுமுக உறவு அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை அடுத்து, விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில், இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் செல்வதற்கு தனது எல்லையை சீனா திறந்தது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் சீன பயணத்தை அடுத்து இத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

    July 25, 2025
    தேசியம்

    6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்

    July 25, 2025
    தேசியம்

    இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

    July 25, 2025
    தேசியம்

    அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை

    July 25, 2025
    தேசியம்

    கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

    July 25, 2025
    தேசியம்

    வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு: புதிய எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாநிலங்களவை எம்​.பி.​யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம்
    • வாரத்திற்கு மூன்று முறை தலையை மசாஜ் செய்வது ஆரோக்கியத்தில் இந்த ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவ்வாறு செய்வதற்கான சரியான வழி – இந்தியாவின் டைம்ஸ்
    • சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
    • பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
    • அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு: பொதுவான வயிற்று பாக்டீரியாக்கள் 12 மில்லியன் புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.