Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து
    மாநிலம்

    நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார்.

    சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில் நடை​பெற்​றது.

    இடமாறு​தலாகி செல்​லும் இரு நீதிப​தி​களை​யும் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாழ்த்​திப் பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் அனு​ம​திக்​கப்​பட்ட நீதிப​தி​களின் மொத்த பணி​யிடங்​கள் 75. கடந்த 7 மாதங்​களில் மட்​டும் 12 நீதிப​தி​கள் பணி ஓய்வு பெற்​று​விட்​டனர். இப்​போது 2 நீதிப​தி​கள் இடமாறு​தலில் செல்​கின்​றனர். தற்​போது 56 நீதிப​தி​கள் மட்​டுமே பணி​யில் உள்​ளனர். 19 நீதிபதி பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​தப்பணி​யிடங்​களை விரை​வில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்​றார்.

    துளியும் மகிழ்ச்சி இல்லை: நீதிபதி விவேக்​கு​மார் சிங் நன்றி தெரி​வித்து பேசுகை​யில், “பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​விட்டு மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலில் செல்​வ​தில் எனக்கு துளி​யும் மகிழ்ச்சி இல்​லை.

    எதற்​காக என்னை அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​திலிருந்து சென்​னைக்கு மாற்​றி​னார்​கள் என்​பதும், தற்​போது சென்​னையி​லிருந்து மத்​திய பிரதேசத்​துக்கு மாற்​றி​யுள்​ளார்​கள் என்​பதும் எனக்கு தெரி​யாது. ஆனால் சென்​னை​யில் பணி​யாற்​றிய அனுபவம் வித்தியாச​மானது. அந்த நீங்​காத நல்ல நினை​வு​களு​டன் மத்​திய பிரதேசம் செல்​கிறேன்” என்​றார்.

    இதே​போல ஆந்​தி​ரா​வுக்கு செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் பேசுகை​யில், “நீ​திப​தி​கள் இடமாற்​றம் என்​றாலே அவர்​கள் மீது ஏதாவது குறை கண்​டு​பிடிப்​பதும், ஊழல், வேண்​டப்​பட்​ட​வர்​களுக்​காக தீர்ப்பு போன்​றவற்​றுக்​காக மாற்​றம் செய்யப்பட்டுள்ளதாக கருதும் மனப்​பான்மை பெரும்​பாலும் உள்​ளது.

    ஆனால் நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்​டு. இவ்​வாறு அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​பவர்​களுக்கு பல உயர் நீதி​மன்​றங்​களில் பணி​யாற்​றிய அனுபவம் கிடைக்​கும். அவர்​கள்​தான் பின்​னாளில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களாக​வும் பணி​யமர்த்​தப்​படு​கின்​றனர்.

    சிறப்பான அனுபவம்: அந்த வகை​யில் எனக்​கும் மிகச்​சிறப்​பான அனுபவம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கிடைத்​தது. யாருக்கும், எதற்​கும் பயமின்றி துணிச்​சலுடன் எனது பணியை நேர்​மை​யுடன், நியாய​மாக செய்​துள்​ளேன் என நம்​பு​கிறேன். எனது சொந்த மாநிலத்​துக்கு என்னை இடமாறு​தல் செய்​துள்ள உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு எனது நன்​றி” என்​றார்.

    முன்​ன​தாக நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செய்​தார்.

    அப்​போது தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், செய​லா​ளர் ஆர்​.கிருஷ்ணகு​மார்​, வழக்​கறிஞர்​ எம்.பழனிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுகேட்புக் கருவி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

    July 24, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு 20,450 கனஅடி நீர்வரத்து

    July 24, 2025
    மாநிலம்

    பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி

    July 24, 2025
    மாநிலம்

    மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும்: இபிஎஸ் கருத்து

    July 24, 2025
    மாநிலம்

    “திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” – குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்

    July 24, 2025
    மாநிலம்

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதி

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு
    • ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுகேட்புக் கருவி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
    • ஒரு பூனை ஒரு ராஜா கோப்ராவைக் கொல்ல முடியுமா? இந்த கொடிய முகம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து 
    • விரைவில் சூப்பர் சிங்கர் சீனியர் 11!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.