Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்
    மாநிலம்

    மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் (சி.எம்​.ஆர்​.எல்.) பயண அட்​டையி​லிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு ஆக. 1-ம் தேதி​முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மெட்ரோ ரயில்​களில் பயணிக்க வசதி​யாக, சி.எம்​.ஆர்​.எல். பயண அட்​டை​யுடன் கூடு​தலாக தேசிய பொது போக்​கு​வரத்து அட்டை (சிங்​கார சென்னை அட்​டை) கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

    இந்த அட்டை பயன்​படுத்​து​வோரின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்​தது. மேலும் இந்த அட்​டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்​படுத்​தும் திட்​டம் ஜன.6-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இதன்​பிறகு, சிங்​கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்​ணிக்கை நாள்​தோறும் அதி​கரிக்​கிறது.

    இந்​நிலை​யில்​,சி.எம்​.ஆர்​.எல். பயண அட்​டையி​லிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு ஆக. 1-ம் தேதி முதல் முழு​மை​யாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது.

    இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறியதாவது: சென்​னை​யில் 41 மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (சி.எம்​.ஆர்​.எல்.) பயண அட்​டைகளை ரீசார்ஜ் செய்​யும் வசதி நிறுத்​தப்​படு​கிறது.

    க்யூஆர் பயணச்​சீட்​டு​கள் மற்​றும் பிற பயணச்​சீட்டு பெறும் முறை​கள் வழக்​கம்​போல் தொடரும். பயணி​கள் தங்​களது பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்​களில் பயணிப்​ப​தற்கு பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

    பயண அட்​டை​யின் இருப்​புத் தொகை குறைந்​த​பட்ச மதிப்பை (ரூ.50-க்​கும் குறை​வாக) அடை​யும் போது, சி.எம்​.ஆர்​.எல். பயண அட்​டையை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் பயணச்​சீட்டு கவுன்ட்​டர்​களில் ஒப்​படைத்து விட்​டு, அதற்​கு பதிலாக சிங்கார சென்னை அட்​டையை எவ்​வித கட்​ட​ண​மும் இல்​லாமல் பெற்​றுக்​கொள்​ளலாம்.

    அத்​துடன், பழைய பயண அட்​டை​யின் வைப்​புத்​தொகை மற்​றும் மீத​முள்ள தொகையை புதிய சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற்​றிக் கொண்​டு, பயணி​கள் தொடர்ந்து பயன்​படுத்​திக்​கொள்​ளலாம் என்று அவர்​கள் கூறினர்.

    சிறப்பு முகாம்: ஒரே அட்​டை​யில் மாநகரப் பேருந்​து, மெட்ரோ ரயில்​களில் பயணிக்​கும் வசதி இருப்​ப​தால், தின​மும் 1,500-க்​கும் மேற்​பட்​டோர் புதி​தாக சிங்​கார சென்னை அட்​டையை வாங்​கு​கின்​றனர். இந்த அட்டை பயணி​களுக்கு தடை​யின்றி கிடைக்க வசதி​யாக, கிண்​டி, சை​தாப்​பேட்​டை, ஆயிரம்​விளக்​கு உட்​பட பல இடங்​களில்​ அரங்​கு​கள்​ அமைத்​து, புதி​ய அட்​டைகள்​ விற்​பனை செய்​யப்​படுகின்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

    September 12, 2025
    மாநிலம்

    கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! – பழனிசாமி ‘ஸ்டைலில்’ பழிபோடும் தினகரன்!

    September 12, 2025
    மாநிலம்

    போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

    September 12, 2025
    மாநிலம்

    திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
    • சியா, ஆளி, எள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? AIIMS பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்
    • கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • வெட்டப்பட்ட பழங்களை பழுப்பு நிறமாக மாற்றுவதைத் தடுப்பது எப்படி: பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.