Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!
    மாநிலம்

    முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறலாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடிக்கான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன.

    அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது.

    குறிப்பாக உயிர் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீட்டு திட்ட அட்டை வைத்திருந்தும், அது முழுமையாக பலனளிக்காத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், அந்த விவரங்களை செல்போன் செயலி மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ்.வினீத் கூறியதாவது: முதல்வர் காப்பீட்டுத் திட்ட செபோன் கைப்பேசி செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. விரைவில் அந்த செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தகுதியான யாரும், அதன் மூலமாக விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

    அதன் பின்னர், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில், எந்த மருத்துவமனைகளில் எல்லாம் முதல்வர் காப்பீட்டின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

    சிகிச்சை விவரங்கள் குறித்தும் தகவல் பெறலாம். பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்களையும் செல்போனில் அறிந்து கொள்ள முடியும். முதல்வர் காப்பீட்டுத் திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!

    July 23, 2025
    மாநிலம்

    9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை

    July 23, 2025
    மாநிலம்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கூடுதல் அவகாசம் 

    July 23, 2025
    மாநிலம்

    ராமநாதபுரம்: கடலாடி அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க வர்த்தக சங்கம் கோரிக்கை

    July 23, 2025
    மாநிலம்

    மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் – ஐகோர்ட்டில் வனிதா தகவல்

    July 23, 2025
    மாநிலம்

    இபிஎஸ் அழைப்பை நிராகரிக்கும் விஜய், சீமான் – அதிமுகவின் ‘பிளான் பி’ என்ன?

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாய்கள் பார்கின்சன் நோயை வாசனை மூலம் கண்டறிய முடியும், ஆய்வு வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!
    • மரணம் அருகில் இருக்கும்போது எப்படி தெரிந்து கொள்வது: 11 உடல்நலம் தொடர்பான அறிகுறிகள் மற்றும் இறுதி நேரங்களில் என்ன எதிர்பார்க்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொடர் அமளி எதிரொலி: ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
    • இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.