Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீஸார் விசாரித்தபோது உயிரிழந்தார். இது தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், “அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அஜித்குமார் குடும்பத்துக்கும், போலீஸாரால் தாக்கப்பட்ட நவீன், அருண், பிரவீன் ஆகியோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: : அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கைப்போல, அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆக. 20-ல் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். முக்கிய சாட்சிகளான நவீன், அருண், பிரவீன், சக்தீஸ்வரன் ஆகியோருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கக் கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது சிவகங்கை மாவட்ட நீதிபதி ஒரு வாரத்தில் விசாரித்து, 4 பேருக்கும் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.

    காவல் மரணம் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அஜித்குமார் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு தரப்பில் ஏற்கெனவே ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.25 லட்சத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் பெறலாம். விசாரணை ஆக. 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பாமல் எப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் மற்றும் அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த நாளின் உறவு குறிப்பு: மகிழ்ச்சியான பிணைப்புகளுக்கு சகோதரி ஷிவானியின் அறிவுரை: “உறவுக்குச் செல்லுங்கள்…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையரை குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த ஆற்றல் பயன்பாட்டிற்கு இயக்க இதுவே சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொழில்முனைவோர், குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்: வணிக வெற்றிக்காக எலோன் மஸ்க் சத்தியம் செய்யும் 5 பழக்கங்கள்
    • ‘எனக்கு போதுமான திறமை உள்ளது’: கனடாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் டிக்டோக்கில் ‘இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பதிலளித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.