Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் நலமுடன் இருக்கிறார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
    மாநிலம்

    முதல்வர் நலமுடன் இருக்கிறார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் நலமுடன் இருக்கிறார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று காலை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டரை மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் அழைத்து வரப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து, முதல்வரிடம் நலம் விசாரித்தார்.

    மருத்துவமனையில் இருந்தபடியே… முதல்வர் ஸ்டாலின், தனது அலுவலகப் பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பில், “முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலர் நா.முருகானந்தத்துடன், அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். கடந்த 21-ம் தேதி வரை இந்த திட்டத்தில் 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்த முதல்வர், திட்ட முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும், முகாம்களுக்கு வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துதர வேண்டும், மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் நலமாக இருக்கிறார். அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 23, 2025
    மாநிலம்

    “மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

    July 23, 2025
    மாநிலம்

    “மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்” – வானதி சீனிவாசன்

    July 23, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: மருத்துவர், செவிலியர், உதவியாளர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை

    July 23, 2025
    மாநிலம்

    ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 23, 2025
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் காதலன் டிராவிஸ் கெல்ஸின் சகோதரர், கடலில் ஒரு சுறாவைக் கண்ட பிறகு மனைவியை விட்டு வெளியேறுவதை ஒப்புக்கொள்கிறார், பெருங்களிப்புடைய போட்காஸ்ட் தருணத்தில் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    • நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
    • ஆப்டிகல் மாயை: மறைக்கப்பட்ட விலங்கை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான கண்கள் மட்டுமே அதைப் பார்ப்பார்கள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை தொடங்குகிறது இந்தியா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.