Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் முக்கிய சாட்சிகள் 4 பேருக்கு பாதுகாப்பும் வழங்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அஜித்குமாரின் குடும்பத்திற்கு 7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. மேலும், சிபிஐ தரப்பில், விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள், “வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் 7 வேலை நாட்களுக்குள்ளாக விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து பேசிய நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணத்தால் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகியவற்றையும் வழங்கி உள்ளது.

    கூடுதலாக ரூ.25 லட்சம் பாதிக்கப்பட்ட அஜித்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப் பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

    July 23, 2025
    மாநிலம்

    “மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்” – வானதி சீனிவாசன்

    July 23, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: மருத்துவர், செவிலியர், உதவியாளர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை

    July 23, 2025
    மாநிலம்

    ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 23, 2025
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!

    July 23, 2025
    மாநிலம்

    9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு” – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
    • நிலத்தடி ஸ்டெராய்டுகளில் காணப்படும் கனரக உலோகங்கள் சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் பல இளைஞர்களுக்கு பெரும் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன: அறிக்கை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை திருவிழா: ஜூலை 27-ல் பிரதமர் மோடி பங்கேற்பு
    • “மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்” – வானதி சீனிவாசன்
    • ஈவ் வேலைகள் யார்? விரைவில் 6.7 மில்லியன் டாலர் திருமணத்தில் ஒலிம்பியன் ஹாரி சார்லஸை திருமணம் செய்த ஸ்டீவ் ஜாப்ஸின் இளைய மகள்; அவரது தொழில் குடும்ப மரபு நிகர மதிப்பு மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.