Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொடிக் கம்பம் வழக்கு: அனைத்து கட்சிகளும் ஆக.5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கொடிக் கம்பம் வழக்கு: அனைத்து கட்சிகளும் ஆக.5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 22, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொடிக் கம்பம் வழக்கு: அனைத்து கட்சிகளும் ஆக.5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகஸ்ட் 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற காலக்கெடு விதித்தும், பட்டா இடங்களில் உரிய அனுமதி பெற்று கொடிக் கம்பங்களை அமைக்கலாம் என உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டது.

    இந்நிலையில், கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றி உத்தரவிட்டது.

    இதையடுத்து, கொடிக் கம்பங்களை அகற்றும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சௌந்தர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? கொடிக் கம்பங்கள் இடையூறாக இருப்பதாக கருதினால், சிலைகளும் இடையூறு தானே? அனைத்து கொடிக் கம்பங்களையும் அரசு புறம்போக்கு நிலங்களில் ‘கொடி மண்டலம்’ உருவாக்கி அங்கு வைக்கலாம். கொடி மற்றும் கொடிக் கம்பங்களின் அளவு, உயரம், உறுதித்தன்மையை நிர்ணயம் செய்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கலாம்” என்றனர்.

    மனுதாரர்கள் சார்பில், “ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் அமைப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அரசியல் கட்சிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாக கொடிக் கம்பங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் கொடி கம்பங்களை அகற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை ஏற்க முடியாது” எனக் கூறப்பட்டது.

    அரசு தரப்பில், “இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மட்டும் இல்லாமல், தேசிய கட்சிகளின் கொடி கம்பங்களும் உள்ளன. கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சிலைகளை பொறுத்தவரை ரவுண்டானாவில் அமைக்கப்படுகிறது. இதனால் சிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொடிக் கம்பங்கள் சாலையோரங்களில் அமைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்களிடம் கருத்து கேட்காமல் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என மனுதாரர்கள் தரப்பில் பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க நீதிமன்றம் முடிவு செய்கிறது.

    இதனால், இந்த வழக்கில் இணைய விரும்பும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்கள் ஆகஸ்ட் 5-க்குள் உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் இடையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கபடாது. இந்த வழக்கில் இணைய விரும்பும் கட்சிகள், சமூக அமைப்புகள், சங்கங்கள் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசு தலா 2 ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் ஜூலை 25-க்குள் விளம்பரம் வெளியிட வேண்டும். அதுவரை கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 6-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!

    September 12, 2025
    மாநிலம்

    அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல்

    September 12, 2025
    மாநிலம்

    கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை

    September 12, 2025
    மாநிலம்

    காங். எம்எல்ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!
    • ஒவ்வொரு வாரமும் உங்கள் துண்டுகளை கழுவுவது தவறு! இங்கே நீங்கள் அவற்றை எவ்வளவு அடிக்கடி கழுவ வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை
    • அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
    • வழுக்கை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இடையே ஒரு தொடர்பு உள்ளதா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.