Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனைத் தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

    அதனால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, நான்கு வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு அன்புமணி சுற்றுப்பயணம்

    July 23, 2025
    மாநிலம்

    பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சென்னையில் இன்று 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம்

    July 23, 2025
    மாநிலம்

    சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்: பழனிசாமி விமர்சனம்

    July 23, 2025
    மாநிலம்

    மேட்டூரிலிருந்து நீர் திறப்பு 16,000 கனஅடியாக குறைப்பு!

    July 23, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை

    July 23, 2025
    மாநிலம்

    பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எரிபொருள் சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா
    • அனுராக் காஷ்யப்பை பிரிந்தது ஏன்? – கல்கி கோச்சலின் விளக்கம்
    • தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு அன்புமணி சுற்றுப்பயணம்
    • 3 காய்கறிகள் கல்லீரலைப் பாதுகாக்க ஒரு இரைப்பை குடல் நிபுணர் சாப்பிடுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.