Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை
    தேசியம்

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வரும் ஜூலை 24 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி உடனடியாக விசாரிக்க கோரியதை அடுத்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

    முன்னதாக, கடந்த 2006-ம் ஆண்டு 189 பேர் உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு நீதி​மன்​றம் விதித்த ஆயுள், மரண தண்​டனை ரத்து செய்​யப்​பட்​டது.

    கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்​களில், 11 நிமிடங்​களுக்​குள் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்தன. இதில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

    இது தொடர்​பாக மும்பை சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசாரணை​யின் முடி​வில், 12 பேர் குற்​ற​வாளி​கள் என விசா​ரணை நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும், 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

    இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிப​தி​கள் அனில் கிலோர் மற்​றும் ஷ்யாம் சந்​தக் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து வந்​தது. விசாரணை முடிந்த நிலை​யில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

    அதில், “மும்பை தொடர் குண்​டு​வெடிப்பு வழக்​கில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் மீதான குற்றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​டது. இவர்​கள் இந்த குற்​றத்​தில் ஈடு​பட்​டார்​கள் என சந்​தேகத்​தின் பேரில் கூறுவதை ஏற்க முடி​யாது.

    மேலும் விசா​ரணை​யின்​போது மீட்​கப்​பட்ட வெடிபொருட்​கள், ஆயுதங்​கள் மற்​றும் வரைபடங்​கள் ஆகிய​வற்​றுக்கு குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துடன் தொடர்பு இருப்​பது உறுதி செய்​யப்​பட​வில்​லை. இந்த தாக்​குதலில் என்ன வகை​யான குண்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்டன என்​ப​தைக் கூட அரசுத் தரப்​பால் நிரூபிக்க முடிய​ வில்லை.

    எனவே, இந்த வழக்​கில் தொடர்​புடைய 12 பேர் குற்​ற​வாளி​கள் என சிறப்பு நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பும் அவர்களுக்கான தண்​டனை​யும் ரத்து செய்​யப்​படு​கிறது. வேறு எந்த வழக்​கும் நிலு​வை​யில் இல்​லா​விட்​டால் அனை​வரை​யும் சிறையி​லிருந்து விடு​தலை செய்ய வேண்​டும்​.” என்று கூறப்பட்டிருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    July 23, 2025
    தேசியம்

    குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    July 23, 2025
    தேசியம்

    ஹைட்ராலிக் கோளாறால் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் தாயகம் புறப்பட்டது

    July 23, 2025
    தேசியம்

    உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை

    July 23, 2025
    தேசியம்

    இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் 30-ல் விண்ணில் பாய்கிறது!

    July 23, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை
    • தனியாக இருக்கும்போது மாரடைப்பைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? சிறந்த அமெரிக்க இருதய அறுவை சிகிச்சை நிபுணர் 4 உயிர் காக்கும் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
    • அடுத்த மாதம் தொடங்குகிறதா இந்தியன் 3 படப்பிடிப்பு?
    • பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.