Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் நலம் விசாரிப்பு
    மாநிலம்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் நலம் விசாரிப்பு

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் நலம் விசாரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சமாளித்துக் கொண்ட முதல்வர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றார்.

    இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

    முதல்வர் உடல்நிலை குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கூறுகையில், “முதல்வர் நன்றாக உள்ளார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக பயணங்கள், ரோட் ஷோ மேற்கொண்டதால் அவருக்கு தலைசுற்றல் இருந்து வந்தது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவர்கள் முதல்வரை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார் கள். 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 22-ம் தேதி (இன்று) ஒரு சில மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சைக்கு பிறகு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்” என்றார்.

    இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த், முக்கிய அரசியல் தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்கள் ஓய்வெடுக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. முதல்வர் மருத்துவமனையில் இருந்தே தனது அலுவலக பணிகளை கவனித்துக் கொள்வார்’ என கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ – முதல்வர் ஸ்டாலின்

    July 22, 2025
    மாநிலம்

    ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு

    July 22, 2025
    மாநிலம்

    “நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்” – சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி

    July 22, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி பெற தடை: இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி

    July 22, 2025
    மாநிலம்

    மழையால் விழுந்த மரத்தை அகற்றாததால் இ-சேவை மையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

    July 22, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் இடங்களை நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ – முதல்வர் ஸ்டாலின்
    • குழந்தையின் நம்பிக்கையை அழிக்கும் 5 பெற்றோருக்குரிய தவறுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆகஸ்ட் 2 அன்று சூரிய கிரகணம்: ஒரு அரிய 100 ஆண்டு நிகழ்வில் 6 நிமிடங்களுக்கு மேல் உலகம் ஏன் இருளில் இருக்கும்; இது இந்தியாவில் தெரியுமா? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை
    • கோலியை ‘காப்பி’ அடிக்கிறார் கில்; அவர் மொழியும், வசை வார்த்தைகளும் சரியில்லை- மனோஜ் திவாரி சாடல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.