Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘கானல் நீர்’ ஆன சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல்
    சினிமா

    ‘கானல் நீர்’ ஆன சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல்

    adminBy adminJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கானல் நீர்’ ஆன சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆரம்பகால தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில், வங்க மொழி நாவல்கள் அதிகமாகத் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதிலும் சரத் சந்திர சட்டர்ஜியின் பல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. அவர் நாவல்களில் இருந்து தமிழில் உருவான, ‘தேவதாஸ்’, ‘மணமாலை’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவருடைய ‘பரோதிதி’ என்ற நாவல், ‘கானல் நீர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. சட்டர்ஜி அதிகம் பிரபலமாகாத காலத்தில் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதிய கதை இது. இந்தக் கதை அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

    நடிகை, திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பானுமதி, பல மறக்க முடியாத படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இந்தக் ‘கானல் நீர்’. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா, தனது பரணி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இந்தப் படத்தை இயக்கினார்.

    தெலுங்கு, தமிழில் உருவான இதில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஏ.நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடித்தார். சவுகார் ஜானகி, ‘கல்கத்தா’ விஸ்வநாதன், ‘ஜாவர்’ சீதாராமன், எம்.ஆர்.சந்தானம், பி.எஸ்.ஞானம், சூரியகாந்தம் மோகனா, ஜெயராமன், ‘அப்பா’ கே.துரைசாமி, ‘பேபி’ காஞ்சனா, பி.ஆர்.பந்துலு ஆகியோர் நடித்தனர்.

    ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவுக்குப் படிப்பைத் தொடர அனுமதி மறுக்கப்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியேறி, தனது அடை யாளத்தை மறைத்து மெட்ராஸ் வருகிறார். ஒரு செல்வந்தர், தனது இளைய மகளுக்கும் இளம் வயதில் விதவையாகிவிட்ட மூத்த மகளான பானுமதிக்கும் கல்வி கற்றுக்கொடுக்க நாகேஸ்வர ராவை நியமிக்கிறார். நேரில் பார்க்க வில்லை என்றாலும் பானுமதியும் நாகேஸ்வரராவும் காதலிக்கிறார்கள். பிறகு உறவினர்கள் சிலரின் விளையாட்டுத் தனத்தால் அவரை வெறுக்கும் சூழல் ஏற்படுகிறது பானுமதிக்கு. வேலையில் இருந்து நீக்குகிறார்.

    இதையடுத்து ஒரு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் நாகேஸ்வரராவ் பற்றி தெரிந்து, அவர் தந்தை ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். பானுமதியை மறக்க முடியாத அவர், பெற்றோருக்காக சவுகார் ஜானகியை மணக்கிறார். ஆனாலும் பானுமதியை மறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாகேஸ்வர ராவ் ஜமீன்தார் என்பது பானுமதிக்கு தெரியவர, பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

    மாஸ்டர் வேணு இசை அமைத்தார். கண்ணதாசன், கு.மா.பாலசுப்பிரமணி யன் பாடல்கள் எழுதினர். ‘கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு’, ‘வழி தேடி வந்தாய் புரியாமல் நின்றேன்’, ‘அம்மான் மகள் பாரு’, ‘உலகம் தெரியா பயிரே’ என பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

    தெலுங்கில் 1961-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வெளியான இந்த படம், தமிழில் 1961-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. படத்தில் பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மனிஷா ஷர்மாவின் ஊக்கமளிக்கும் மாஸ்டர்செஃப் ஓட்டம்: பார்கின்சனுக்கு எதிரான உதய்பூர் சிறுமியின் போராட்டம், ஆர்வத்திற்காக – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கனடாவில் பஞ்சாபி தொழிலதிபர் சுட்டுக்கொலை: 8 மாதங்களில் 3வது சம்பவம்; எரிந்த வாகனத்தை கண்டுபிடித்த போலீசார் | சண்டிகர் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா முதன்முதலில் மருத்துவ வெளியேற்றத்தை துவக்கியது: நான்கு விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து சீக்கிரம் திரும்பினர்; பணி ஒரு மாதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இளவரசி லியோனோர்: 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் ராணியாக ஆவதற்கு தயாராக உள்ள 20 வயது ஜெனரல் இசட் அரச குடும்பத்தைச் சந்திக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: மினியாபோலிஸ் எதிர்ப்பு மோதலில் ICE முகவர்கள் ஜன்னலை உடைத்து, ‘ஊனமுற்ற’ பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்றது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.