Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ – காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து
    தேசியம்

    ‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ – காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து

    adminBy adminJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ – காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.முரளிதரன் கூறியுள்ளார்.

    அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்கும் சசி தரூருக்கும் இடையிலான பிளவை பொதுவெளியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்கும் குழுவுக்கு சசி தரூர் தலைமை வகித்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் முரளிதரன் இதனை கூறியுள்ளார்.

    “எங்களில் ஒருவராக சசி தரூரை நாங்கள் பார்க்கவில்லை. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரையில் நாங்கள் அவரை கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப் போவது இல்லை. அவர் எங்களுடன் இல்லாத காரணத்தால் அவரை புறக்கணிப்பது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவர் மீதான நடவடிக்கை குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும்” என கே.முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை அன்று கூறினார்.

    முன்னதாக, கொச்சியில் நடைபெற்ற பள்ளி நிகழ்வில் பேசிய சசி தரூர், “தேசம் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அப்போதுதான் நாம் அனைவரும் வாழ முடியும். என் கருத்துப்படி, தேசம் முதலில் வரவேண்டும். கட்சிகள் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தக் கட்சியின் நோக்கம் அதன் வழியில் சிறந்த இந்தியாவை உருவாக்குவதாகும்.

    சித்தாந்தங்கள் அடிப்படையில் கட்சிகள் வேறுபடலாம் என்றாலும், அவை அனைத்தும் சிறந்த, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். அரசியல் என்பது போட்டி நிறைந்தது. என்னைப் போன்றவர்கள் எங்கள் கட்சியை மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பு நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் கூறும்போது, சில சமயங்களில் கட்சிகள் இதை விசுவாசமற்றதாக உணர்கின்றன. அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

    நமது ஆயுதப்படைகள் மற்றும் நமது அரசாங்கத்தை ஆதரிப்பதில் நான் எடுத்த நிலைப்பாட்டால் பலர் என்னை மிகவும் விமர்சிக்கின்றனர். ஆனால் இது நாட்டுக்கு சரியான விஷயம் என்று நான் நம்புவதால் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்.” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்ற அவைகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி கொண்டாடப்படும்: பிரதமர் மோடி

    July 22, 2025
    தேசியம்

    குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!

    July 21, 2025
    தேசியம்

    பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான் காட்டம்

    July 21, 2025
    தேசியம்

    எம்.பிக்களுக்கு மதச்சார்பின்மை வார்த்தை இடம்பெறாத அரசியலமைப்பு புத்தகம்: மக்களவைத் தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மழைக்காலத்தில் மென்மையான மற்றும் ஃப்ரிஸ் இல்லாத கூந்தலுக்கான வீட்டில் முடி முகமூடிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி’ – சிராஜ்
    • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
    • வெள்ளை சர்க்கரை Vs பழுப்பு சர்க்கரை Vs வெல்லம்: எது ஆரோக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்ற அவைகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி கொண்டாடப்படும்: பிரதமர் மோடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.