Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம்: உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    மாநிலம்

    மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம்: உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

    adminBy adminJuly 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம்: உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மயி​லாடு​துறை: அரசு வாக​னம் பறிக்​கப்​பட்ட விவ​காரத்​தில் உயர் அதி​காரி​கள் மீது குற்​றம்​சாட்​டிய மயி​லாடு​துறை மது​விலக்கு டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டுள்​ளார்.

    மயி​லாடு​துறை​யில் மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாகப் பணி​யாற்றி வந்​தவர் சுந்​தரேசன். இவர், தான் நேர்​மை​யாகப் பணி​யாற்​றிய​தால், தனது அரசு வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக புகார் தெரி​வித்​தார். மேலும், எஸ்​.பி.உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் மீதும் புகார் தெரி​வித்​திருந்​தார். காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தால், இவரை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு மத்​தியமண்டல ஐ.ஜி.க்​கு, தஞ்​சாவூர் சரக டிஐஜி ஜியா​வுல் ஹக் பரிந்​துரை செய்​திருந்​தார்.

    இதையடுத்​து, அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களைகூறி ஊடகங்​களுக்கு பேட்டி அளித்​த​தா​லும், பொது ஊழியருக்​கான விதி​களை மீறி ஒழுங்​கீன செயல்​களில் ஈடு​பட்​ட​தா​லும் அவரை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் நேற்​றிரவு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். மேலும், முன் அனு​ம​தி​யின்றி மயி​லாடு​துறையை விட்டு வெளியூர்​களுக்கு செல்​லக் கூடாது எனவும் அந்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

    முன்​ன​தாக, மயி​லாடு​துறை​யில் டிஎஸ்பி சுந்​தரேசன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நான் உயர் அதி​காரி​கள் மீது புகார் கூறிய​தால், தற்​போது என் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கின்​றனர். நான் தவறு செய்​திருந்​தால், அப்​போதே என்னை பணி​யிடை நீக்​கம் செய்​திருக்க வேண்​டும். என் மீது பாலியல் உட்பட பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை சொல்​கிறார்​கள். ஆனால், அதற்​காக அப்​போது ஏன் என்னை பணி​யிடை நீக்​கம் செய்​ய​வில்​லை?

    எனக்கு ஏற்​பட்​டுள்ள இந்த நிலை​யால் எனது தந்​தைக்கு உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டு, சென்​னை​யில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவரை பார்க்க செல்​வதற்கு கூட எனக்கு அனு​மதி வழங்​க​வில்​லை. நான் மிகுந்த மன அழுத்​தத்​தில் உள்​ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்​ளது. எனக்கு பாது​காப்பு கொடுக்க வேண்​டும். தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் இதில் தலை​யிட்டு, விசா​ரிக்க வேண்​டும். தமிழக முதல்​வரும் இந்த விவ​காரத்​தில் நேரடி​யாக தலை​யிட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? – அன்வர் ராஜா பேட்டி

    July 21, 2025
    மாநிலம்

    அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    July 21, 2025
    மாநிலம்

    நவம்பர் மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

    July 21, 2025
    மாநிலம்

    பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல்

    July 21, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிய ஜூலை 25, 26-ல் பதிவு துறை சிறப்பு முகாம்

    July 21, 2025
    மாநிலம்

    பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மழைக்கால கூட்டத்தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும்: பிரதமர் மோடி
    • அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? – அன்வர் ராஜா பேட்டி
    • நீங்கள் ஏன் 3 முதல் 5 மணி வரை எழுந்திருக்கிறீர்கள்: உண்மையில் என்ன அர்த்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா எச்சரிக்கை! 95-அடி சிறுகோள் 2025 ME92 ஜூலை 31 அன்று 11,000 மைல் வேகத்தில் பூமியைக் கடந்தது; நாம் கவலைப்பட வேண்டுமா | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.