Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு
    வணிகம்

    உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு

    adminBy adminJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங் களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார நுகர்வோர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த மாற்றப்பட்ட விதி களை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உத்தரவிட்டது.

    தமிழகத்தில் வீடுகள், குடிசை போன்ற பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வணிக இணைப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    உச்ச நேர கட்டணம்: தமிழகத்தில் தினமும் காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு இருக்கிறது. இதனால் தொழிற்சாலை போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, பீக் ஹவர் சார்ஜ் எனப்படும், உச்ச நேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் உச்ச நேர மின் கட்டணமாக, ஒரு யூனிட் கட்டணத்துடன் 25 சதவீதம் கூடுதலாகச் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

    இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உச்ச நேரம், சலுகை நேரம், மற்ற நேர மின் பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்படுகிறது.

    26 ஆயிரம் இணைப்புகளுக்கு… தற்போது உயரழுத்த மின் இணைப்புகள், வணிக இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் இந்த டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வழுத்தப் பிரிவுகளில் 42 லட்சம் இணைப்புகளுக்கு இந்த மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் 26 ஆயிரம் இணைப்புகளுக்கு டி.ஓ.டி. மீட்டர் பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம், சென்னை (வடக்கு), வேலூர், கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மண்டலங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள 26 ஆயிரம் மும்முனை டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த வேண்டும் என அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 ஆயிரம் மீட்டர்கள், கோவையில் 3,500, சென்னை (வடக்கு) 3 ஆயிரம், மதுரையில் 2500 மீட்டர்களை டி.ஓ.டி. மீட்டர்களாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கீடு செய்த மீட்டர்களை சரியாகப் பயன்படுத்தி தாழ்வழுத்த பிரிவில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய டி.ஓ.டி. மீட்டர்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    டீசலுக்கு நிகராக உயர்ந்த சிஎன்ஜி எரிபொருள் விலை: தட்டுப்பாடு நிலவுவதால் தேடி அலையும் ஆட்டோ ஓட்டுநர்கள்

    July 21, 2025
    வணிகம்

    உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம்

    July 21, 2025
    வணிகம்

    யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி!

    July 21, 2025
    வணிகம்

    ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம்

    July 21, 2025
    வணிகம்

    புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு!

    July 21, 2025
    வணிகம்

    சென்னையில் மேலும் 2 இடங்களில் டெலிவரி ஊழியர் ஓய்வு கூடங்கள்!

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை உயர் நீதிமன்றத்தின் 36-வது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு
    • அதிர்வு தகடுகள் உண்மையில் வேலை செய்யுமா? நன்மைகள், அபாயங்கள் மற்றும் பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோல்ட் பிளே ‘கிஸ் கேம்’ தருணத்திலிருந்து வானியலாளரின் கிறிஸ்டின் கபோட் ஒரு உயரடுக்கு ‘பாஸ்டன் பிராமணர்’ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் – பாஸ்டன் பிராமணர்கள் யார், அவரது குடும்பம் எவ்வளவு செல்வந்தர்? | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ட்ரம்ப்புக்கு மோடியின் பதில் என்ன?’ – எதிர்க்கட்சிகளின் அமளியில் முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை!
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.