Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்
    மாநிலம்

    வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்

    adminBy adminJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் விமர்​சித்​துள்​ளார்.

    இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் 21-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தனது எம்​.பி.க்​களை கூட்டி 11 ஆண்​டு​களாக மத்​திய அரசு தமிழகத்தை வஞ்​சித்து வரு​வ​தாக வழக்​கம்​போல வெறுப்பு அரசி​யல் பேசி தீர்​மானம் நிறைவேற்றி இருக்​கிறார்.

    கடந்த மே மாதம் டெல்​லி​யில் நடந்த நிதி ஆயோக் கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்​தம் செய்து மீட்​கும் புதிய திட்​டம் குறித்து வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​வித்​தார். கூவம் ஆற்றை சுத்​தம் செய்​வ​தாகக் கூறி, மறைந்த முதல்​வர் கருணாநிதி காலம் முதல் திமுக தமிழகத்தை ஏமாற்றி வரு​கிறது. கூவம் ஆறு சுத்​தப்​படுத்​தும் திட்​டத்தை காட்​டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்​டனர்.

    இப்​போது வைகை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட முடி​யுமா என அலைகின்​றனர். ஒவ்​வொரு பிரச்​சினை​யிலும் மத்​திய அரசிடம் கேட்​டு​விட்​டோம் செய்​ய​வில்லை என பழி போட்டு தப்​பித்​துக் கொள்​ளலாமென முதல்​வர் எண்​ணுகிறார். தமிழகத்​துக்கு மத்​திய அரசு எந்த நிதி தரவில்லை என கூறுங்​கள் என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பல முறை கேட்​டு​விட்​டார். ஆனால், இவர்​களிடம் பதில் இல்​லை. பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு தமிழகத்​துக்கு ரூ.11 லட்​சம் கோடி ரூபாய்க்​கும் அதி​க​மாக நிதி வழங்​கி​யுள்​ளது.

    இந்த நிதி​யின் மூலம் தமிழகத்​தில் நிறைவேற்​றப்​பட்ட மக்​கள் நலத்​திட்​டங்​கள் என்​னென்ன, பல ஆண்​டு​களுக்கு பிறகு பைசா அளவில் உயர்த்​தப்​பட்ட ரயில் கட்​ட​ணம் ஏழை எளிய மக்​களை பாதிப்​ப​தாக நீலிக் கண்​ணீர்வடிக்​கும் முதல்​வர் ஸ்டா​லின், தமிழகத்​தில் மூன்று மடங்கு சொத்து வரி உயர்த்​தப்​பட்​டதற்கு என்ன பதில் சொல்​லப்​போகிறார்?

    தற்​போது சிறு கடைகளைக் கூட விட்​டு​வைக்​காமல் மீண்​டும் மின் கட்​ட​ணத்தை உயர்த்​தி​யுள்​ளது தமிழக அரசு. சொந்த மாநில மக்​களின் ரத்​தத்தை உறிஞ்சி குடிக்​கும் முதல்​வருக்கு மனசாட்சி இருந்​தால் ரயில் கட்​ட​ணத்தை பற்றி பேசு​வா​ரா, திமுக குடும்​பம் மட்​டுமே குதூகல​மாக வாழும் இந்த திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​புவதற்கு தமிழக மக்​கள் எப்​போதோ தயா​ராகி விட்​டார்​கள். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில், அதி​முக – பாஜக கூட்​டணி வரலாறு காணாத வெற்றி பெற்று மக்​கள் விரும்​பும் நல்​லாட்​சி​யை வழங்​கும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை – அன்புமணி கடும் தாக்கு

    September 14, 2025
    மாநிலம்

    பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்

    September 14, 2025
    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    September 14, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! – இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

    September 14, 2025
    மாநிலம்

    விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!

    September 14, 2025
    மாநிலம்

    இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா
    • உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை – அன்புமணி கடும் தாக்கு
    • மெதி நீர்: வேகவைத்ததா அல்லது ஊறவைத்ததா? அதிகபட்ச நன்மைகளுக்காக இதை உட்கொள்வதற்கான சிறந்த வழி இது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்
    • தூக்க இழப்பு டிமென்ஷியாவின் அபாயத்தை 40%அதிகரிக்கும், ஆராய்ச்சி காட்டுகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.