Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்
    தேசியம்

    நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்

    adminBy adminJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 20 Jul, 2025 01:14 AM

    Published : 20 Jul 2025 01:14 AM
    Last Updated : 20 Jul 2025 01:14 AM

    நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்

    கொச்சி: லட்சத்தீவு பகுதியில் ஏராளமான குட்டி தீவுப் பகுதிகள் உள்ளன. இவற்றில் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இவற்றில் ஒன்று பிட்ரா தீவு. இங்கு 105 குடும்பங்கள் வசிக்கின்றன.

    இந்த தீவு அமைந்துள்ள பகுதி நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்பட்டது. அதனால் இந்த தீவு முழுவதையும் ராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையடுத்து லட்சத்தீவு வருவாய் துறை சார்பில் கடந்த 11-ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. பிட்ரா தீவின் இருப்பிடம் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக கருதப்படுவதால், இந்த தீவு முழுவதையும் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நில கொள்முதல், மறுவாழ்வு சட்டப்படி, இங்கு வசிக்கும் மக்கள், கிராம சபா உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பிட்ரா தீவில் வசிக்கும் 105 குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. லட்சத்தீவு எம்.பி ஹம்துல்லா சயீத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

    பிட்ரா தீவில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை உள்ளது. இந்த முடிவை நாங்கள் முழுவீச்சில் எதிர்ப்போம். நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவில் மத்திய அரசு ஏற்கெனவே பல தீவுப் பகுதிகளை கையகப்படுத்தியுள்ளது. பிட்ரா தீவில் மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். மாற்றுத்திட்டம் பற்றி ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக பிட்ரா தீவில் வசிப்பவர்களிடம் லட்சத்தீவு நிர்வாகம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    பிட்ரா தீவு மக்களுக்கு அவர் அனுப்பியுள்ள வீடியோ செய்தியில், ‘‘ மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பிட்ரா தீவு மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் எம்.பி.யாக நான் பிட்ரா மற்றும் லட்சத்தீவு தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். இந்த விவகாரத்தை பிட்ரா தீவு மக்களுடன் இணைந்து அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சத்தீஸ்கர் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 6 பேர் உயிரிழப்பு

    July 20, 2025
    தேசியம்

    2036-ல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 நிதியுதவி: அமித் ஷா தகவல்

    July 20, 2025
    தேசியம்

    மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே கருத்து

    July 20, 2025
    தேசியம்

    மதமாற்றத்தில் சாங்குர் பாபா கும்பலுக்கு தமிழகத்துடன் தொடர்பு: சென்னை வருகிறது உத்தர பிரதேச மாநில ஏடிஎஸ் படை

    July 20, 2025
    தேசியம்

    ஜம்மு – காஷ்மீரில் தீவிர சோதனை: தீவிரவாதிகளுக்கு உதவிய 10 பேர் கைது

    July 20, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட இண்டியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சத்தீஸ்கர் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 6 பேர் உயிரிழப்பு
    • நாக தோஷம் நீக்கும் சிதம்பரம் அனந்தீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
    • அதிமுக எம்எல்ஏ தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
    • கறி இலைகள் உங்கள் சருமத்தையும் முடியையும் இயற்கையாகவே எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2036-ல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 நிதியுதவி: அமித் ஷா தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.