Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?
    தேசியம்

    ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?

    adminBy adminJuly 19, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பனாஜி: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணின் முன்னாள் கணவர் ட்ரார் கோல்ட்ஸ்டீன், தங்களின் இரு மகள்களின் ஆரோக்கியம், மனநலம் பற்றி தான் அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த டிசம்பரில் அவர் போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ட்ரார் கோல்ட்ஸ்டீன் அளித்த காவல் துறை புகாரில், “நானும் நினாவும் 2017-ல் சந்தித்தோம். எல்லாம் நன்றாகவே சென்றது. ஆனால் சில காலத்தில் அவர் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தார். குழந்தைகளையும் என்னிடமிருந்து தள்ளியே வைத்தார்.

    நினா எப்போதுமே குழந்தைகள் பள்ளி சென்று முறைப்படி கல்வி கற்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியதில்லை. அவர் பள்ளிக்கூட கல்விக்கும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு எதிரான கருத்துகளையே கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் நான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி கூறும்போதும், ‘இந்தக் கல்வி முறையில் எனக்கு உடன்பாடில்லை’ என்றே கூறுவார்.

    எனக்கு எனது மகள்களின் உடல்நலம், மனநலம் குறித்து அக்கறையுள்ளது. அவர்கள் இதுகாலம் வரை பள்ளி சென்றதில்லை. தாயுடனும் அவருடைய நட்பு வட்டாரத்துடனும் மட்டுமே பழகியுள்ளனர். அவர்கள் வயது கொண்ட குழந்தைகளுடன் பழகியதில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நான் என் மகள்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நிதி ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பக்கபலமாக இருக்க விரும்புகிறேன். அதனாலேயே இந்தப் புகாரை அளிக்கிறேன்.

    என் மகள்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நினா எப்பவு குழந்தைகளை மூளைச் சலவை செய்து என்னிடம் அண்டவிடாமல் செய்துவிட்டார்” என்று அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அவர் கோவாவின் பனாஜி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகார் பற்றி செய்தி, ஊடகங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

    நினா மீட்கப்பட்டது எப்படி? – கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள‌ ராமதீர்த்தா மலையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

    விசாரணை மேற்கொண்ட கோகர்ணா போலீஸாரிடம் நினா கூறியதாவது: நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016-ம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017ல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்த குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாக தெரியும்.

    ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) உடன் இருக்கிறார்கள்.

    என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன். தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் செல்போன் இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன்.

    இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” எனக் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    விமான விபத்துக்கான காரணத்தை ஏஏஐபி பாரபட்சமின்றி ஆராய்கிறது: அமைச்சர் ராம்மோகன் நாயுடு

    July 21, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    July 21, 2025
    தேசியம்

    உ.பி-யில் கன்வர் யாத்ரீகர்களுக்கு மலர் கொடுத்து வழியனுப்பிய முஸ்லிம்கள்!

    July 21, 2025
    தேசியம்

    பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ராஜினாமா

    July 21, 2025
    தேசியம்

    மழைக்கால கூட்டத்தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும்: பிரதமர் மோடி

    July 21, 2025
    தேசியம்

    சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விமான விபத்துக்கான காரணத்தை ஏஏஐபி பாரபட்சமின்றி ஆராய்கிறது: அமைச்சர் ராம்மோகன் நாயுடு
    • தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் முடித்துவைப்பு
    • இயற்கை மூலிகைகள் மூலம் வீட்டில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விலகல்: இந்திய வீரர்களின் கபட நாடகம் – முன்னாள் பாக். பவுலர் விளாசல் 
    • ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.