Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டிஆர்எஃப் குறித்த அமெரிக்க அறிவிப்பு இந்தியாவுடனான கருத்து இடைவெளியை குறைக்கும்: சசி தரூர்
    தேசியம்

    டிஆர்எஃப் குறித்த அமெரிக்க அறிவிப்பு இந்தியாவுடனான கருத்து இடைவெளியை குறைக்கும்: சசி தரூர்

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஆர்எஃப் குறித்த அமெரிக்க அறிவிப்பு இந்தியாவுடனான கருத்து இடைவெளியை குறைக்கும்: சசி தரூர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கும் டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருப்பது, இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள கருத்து இடைவெளியை குறைக்கும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பஹல்காம் தாக்குதலுக்கு உரிமை கோரிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தை இது பாகிஸ்தானுக்குக் கொடுக்கும்.

    வாஷிங்டனுக்கான எனது பயணத்தின்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை பாகிஸ்தான் இன்னமும் வழங்கிக் கொண்டிருப்பதை அமெரிக்கா ஏன் வேடிக்கை பார்க்கிறது என நான் கேட்டபோது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் 23 அமெரிக்கக் கடற்படையினரைக் கொன்ற அபே கேட் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர் என கூறப்படும் நபர் சமீபத்தில் சரணடைந்ததை எனக்கு சுட்டிக்காட்டினார்கள்.

    தங்கள் நாட்டுக்கு விரோதமாக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் அமைப்பு மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பார்வை என்பது அதன் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்றது அல்ல. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளின் தரம் மற்றும் நேர்மை குறித்த நமது சந்தேகம் என்பது நமது சொந்த அனுபவத்தில் இருந்து வந்தது. தற்போது, டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருப்பது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கருத்துக்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு படியாகும். டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிக்க இது உதவும்.” என தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலா தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்தது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

    தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறும்போது, “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது. இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ள முடிவுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறேன்.” என தெரிவித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நீதித்துறை முடிவெடுப்​பதில் ஏஐ பயன்படுத்த தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 21, 2025
    தேசியம்

    நட்பாக பழக கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத்தில் ஒன்று: ஹரியானா நீதி​மன்றம் தீர்ப்பு

    July 21, 2025
    தேசியம்

    ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்

    July 21, 2025
    தேசியம்

    சுற்​றுலா தலமாகிறது வாஜ்​பாய் கிராமம்: ரூ.27 கோடி ஒதுக்கி உ.பி. அரசு உத்​தரவு

    July 21, 2025
    தேசியம்

    மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: ராகுல் காந்தி விமர்சனம்

    July 21, 2025
    தேசியம்

    திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதித்துறை முடிவெடுப்​பதில் ஏஐ பயன்படுத்த தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
    • எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லரு’க்கு ஜெர்மனியில் இருந்து வந்த கார்
    • இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிய ஜூலை 25, 26-ல் பதிவு துறை சிறப்பு முகாம்
    • கருப்பு தேயிலை ஆரோக்கிய நன்மைகள்: ஒவ்வொரு நாளும் ஒரு கப் தேநீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நட்பாக பழக கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத்தில் ஒன்று: ஹரியானா நீதி​மன்றம் தீர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.