Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி
    தேசியம்

    ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பயாபர் கிராமத்தில் மூன்று மர்ம நபர்கள் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பிரவதி பரிதா, “புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில், பதினைந்து வயது சிறுமி ஒருவர் மீது சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன்.

    சிறுமி உடனடியாக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவரின் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

    பாலசோரில் நடந்தது என்ன? – ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 20 வயது மாணவி பி.எட் படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.

    இருப்பினும் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 12-ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் அடுத்த சில மணி நேரத்துக்குள் அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    90 சதவீத தீக்காயத்துடன் அந்த மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த மாணவி உயிருக்கு போராடினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார்.

    பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு தரப்பினரை கொதிப்படைய செய்துள்ளது. அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு அழுத்தம் எழுந்துள்ளது. இந்நிலையில், 14 நாள் நீதிமன்ற காவலில் மாணவி பயின்ற கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல குற்றம்சாட்டப்பட்ட உதவி பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: ராகுல் காந்தி விமர்சனம்

    July 21, 2025
    தேசியம்

    திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது

    July 21, 2025
    தேசியம்

    கனமழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: கேரளாவில் 9 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    July 21, 2025
    தேசியம்

    பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாள் பயணம்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: பரபரப்பான சூழலில் ஒரு மாத காலம் நடைபெறுகிறது

    July 21, 2025
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து பற்றி ஊக செய்திகளை வெளியிட வேண்டாம்: மத்திய அமைச்சர்

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழனிசாமி பேச்சில் உள்நோக்கம் எதுவுமில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
    • இந்த 3 இரண்டாவது வீட்டு இதய சோதனை ஒரு வாழ்க்கை மீட்பராக இருக்கலாம்: இங்கே ஏன் – இந்தியாவின் டைம்ஸ்
    • 2 வீரர்கள் காயம்: இந்திய அணியில் இணைகிறார் அன்ஷுல் காம்போஜ்
    • முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – சீமான் விளக்கம்
    • மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.