Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை
    மாநிலம்

    அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை

    adminBy adminJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும் சென்னை காவல் துறை​யில் பேரிடர் மீட்​புக் குழு உரு​வாக்​கப்​பட்​டது. 290 போலீ​ஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்​புக் குழு​வினர் ஆங்​காங்கே தனித்​தனி குழு​வாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணி​களில் ஈடு​படு​வார்​கள்.

    அதன் முன்​னேற்​பா​டாக காவல்துறை மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி செய​லாக்​கம், அவசர தேவை​களில் உயிர் பாது​காப்பு மற்​றும் மீட்​புப் பணி தொடர்​பாக நேற்று எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானத்​தில் பிரம்​மாண்ட ஒத்​திகை நிகழ்ச்​சியை நடத்​தினர். பயிற்சி பெற்ற 290 போலீ​ஸார் அடங்​கிய 16 சிறப்பு மீட்​புக் குழுக்​களும் இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​றன.

    பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் விரை​வாகச் சென்று மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வது, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உடனடி முதலுதவி அளித்​தல், வேரோடு சாய்ந்த மரங்​கள் அல்​லது பிற அம்சங்களால் தடைபட்ட சாலைகளை சீர்​படுத்​துதல் மற்​றும் மேம்​பட்ட கயிறு நுட்​பங்​களைப் பயன்​படுத்தி உயர​மான கட்​டிடங்​களில் சிக்​கித் தவிக்​கும் நபர்​களை மீட்​டல் போன்ற ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டனர்.

    தாழ்​வான மற்​றும் வெள்​ளத்​தால் பாதிக்​கப்​படும் பகு​தி​களி​லிருந்து மக்​களை ரப்​பர் படகு​களைப் பயன்​படுத்தி வெளி​யேற்​று​தல், வலு​வான கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு நெறி​முறை​களை நிறு​வுதல் மற்​றும் எந்​த வொரு அவசர நிலைகளின்​போதும் ஒருங்​கிணைந்த மற்​றும் தடையற்ற பதிலை உறுதி செய்​வதற்​கான தகவல் தொடர்பு திட்​டங்​களை ஒத்​திகை பார்த்​தல் ஆகிய​வை​யும் இதில் அடங்​கும்.

    இந்த ஒத்​தி​கையை சென்னை தலை​மை​யிடத்து கூடு​தல் காவல் ஆணை​யர் விஜயேந்​திர பிதாரி நேரில் பார்​வை​யிட்டு குழுக்​களின் ஒட்​டுமொத்த தயார் நிலை மற்​றும் செயல்​பாட்​டுத் திறனை ஆய்வு செய்​தார். எந்​தவொரு இயற்கை பேரிடர் சூழ்​நிலை​யிலும் காவல் துறை சரி​யான நேரத்​தில் உதவி வழங்​க​வும் பொது​மக்​களை பாது​காக்​க​வும் நன்கு தயா​ராக இருப்​பதை உறுதி செய்​வதே இந்​தத் தயார் நிலை முயற்​சி​யின் நோக்​கம் என போலீஸ் அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை: புதுவை முதல்வர் ஆதங்கம்

    September 14, 2025
    மாநிலம்

    ”மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை” – வானதி குற்றச்சாட்டு

    September 14, 2025
    மாநிலம்

    நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி

    September 14, 2025
    மாநிலம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஒன்றியமாக ‘அஞ்செட்டி’ உதயம்: முதல்வர் அறிவிப்பு

    September 14, 2025
    மாநிலம்

    ”விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவது நிச்சயம், ஆனால்…” – தினகரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது: கிருஷ்ணசாமி

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை: புதுவை முதல்வர் ஆதங்கம்
    • ”மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை” – வானதி குற்றச்சாட்டு
    • உங்கள் கல்லீரலுக்காக எழுந்து நிற்க: குறைவாக உட்கார்ந்து கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி
    • நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.