Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது
    தேசியம்

    ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

    சத்​தீஸ்​கர் முழு​வதும் 750-க்​கும் மேற்​பட்ட மதுக்​கடைகளை மாநில அரசு நடத்தி வரு​கிறது. இதற்​காக தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது மது​பானங்​களை கொள்​முதல் செய்​த​தில் மிகப்​பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

    கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் சத்​தீஸ்​கரில் விஷ்ணு தியோ சாய் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்​றது. இதன்​பிறகு மது​பான ஊழல் குறித்த விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. மாநில பொருளா​தார குற்​றப்​பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தி​யது.

    இதே ஊழல் விவ​காரம் குறித்து அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுதொடர்​பாக முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல், அவரது மகன் சைதன்யா பாகேல், மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பலமுறை விசா​ரணை நடத்தி உள்​ளனர்.

    இதன் தொடர்ச்​சி​யாக சத்​தீஸ்​கரின் துர்க் மாவட்​டம், பிலாய் நகரில் உள்ள முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்​யப்​பட்​டார். இதன்​பிறகு ராய்ப்​பூர் நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அவரை 5 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

    இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 2019-ம் ஆண்​டில் சத்​தீஸ்​கரில் காங்​கிரஸ் ஆட்சி நடை​பெற்​றது. அப்​போது ஆட்​சி​யாளர்​களின் அறி​வுறுத்​தலின்​படி மூத்த ஐஏஎஸ் அதி​காரி அனில் துடேஜா, அன்​றைய கலால் துறை தலை​வர் திரி​பா​தி, தொழில​திபர் அன்​வர் தபேர் ஆகியோர் இணைந்து ரகசிய குழு ஒன்றை அமைத்​தனர்.

    இந்த குழு, மது​பான ஆலைகளிடம் இருந்து மது​பானங்​களை கொள்​முதல் செய்ய கமிஷன் பெற்று அப்​போதைய ஆட்​சி​யாளர்​களிடம் அளித்​தது. இதன்​படி 12 மது பாட்​டில்​கள் அடங்​கிய ஒரு பெட்​டிக்கு ரூ.75 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூல் செய்​யப்​பட்​டது. மேலும் அரசு மது​பானக் கடைகளில் போலி ரசீதுகள், போலி மது​பானங்​கள் மூல​மும் மிகப்​பெரிய அளவில் மோசடி நடை​பெற்​றது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,200 கோடிக்​கும் அதி​க​மாக ஊழல் நடை​பெற்​றிருக்​கிறது. இதில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலுக்கு மிக நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. இந்த வழக்​கில் 29 அரசு அதி​காரி​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. வழக்கு தொடர்​பாக சைதன்யா பாகேல் உட்பட இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். இவ்​வாறு அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

    முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் கூறும்​போது, “இன்று எனது மகனுக்கு பிறந்த நாள். ஏற்​கெனவே திட்​ட​மிட்டு பிறந்த நாளில் எனது மகனை கைது செய்​துள்​ளனர். சத்​தீஸ்​கரில் அதானி குழு நிலக்​கரி சுரங்க திட்​டத்​துக்கு எதி​ராக எனது மகன் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்​துச் சென்​றார். இதற்கு பழி​வாங்​கும் வகை​யில் அவரை கைது செய்​துள்​ளனர்’’ என்று தெரி​வித்​தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட இண்டியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை

    July 20, 2025
    தேசியம்

    நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பு

    July 20, 2025
    தேசியம்

    நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்

    July 20, 2025
    தேசியம்

    100-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் ரோஹன் சல்டானா மங்களூருவில் கைது

    July 20, 2025
    தேசியம்

    டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?

    July 19, 2025
    தேசியம்

    ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவின் சொந்த விண்வெளி வீரர் பயிற்சி மற்றும் விண்வெளி உளவியல் நெறிமுறைகள் தயாராக உள்ளன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்பட இண்டியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை
    • சேரக்கூடாத இடத்தில் அதிமுக சேர்ந்திருக்கிறது: பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த இரா.முத்தரசன்
    • நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பு
    • மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.