Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
    மாநிலம்

    பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

    adminBy adminJuly 19, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் (16 வயது) சீரநாயக்கன் பாளையம் சென்றுவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவர்களை மறித்தனர். மாணவியையும், அவரது நண்பரையும் வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சென்றனர். வேறொருவரும் அந்த இடத்தில் இருந்துள்ளார்.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து விரட்டினர். பின்னர் 7 பேரும் சேர்ந்து, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை செல்போனில் புகைப்படமும் எடுத்தனர். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி, மாணவியை அங்கிருந்து அனுப்பினர்.

    மகளிர் காவல் நிலையத்தில் புகார்: அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மறுநாள் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாணவி புகார் கொடுத்தார்.

    போக்சோ, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், கோவை சீரநாயக்கன்பாளையம் மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), வடவள்ளி கார்த்தி (25), நாராயணமூர்த்தி (30), ஆட்டோ மணிகண்டன் என்ற மணிகண்டன் (30) ஆகிய 7 பேரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் மகளிர் போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு, அனைவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டனர்.

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றப் பத்திரிகையை மகளிர் போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    தலா ரூ.50 ஆயிரம் அபராதம்: “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் 3 குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்தி, ஆட்டோ மணிகண்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 4 முதல் 7-வது வரையிலான குற்றவாளிகள் ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப, தண்டனை மற்றும் அபராதம் தனித்தனியாக விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 7 குற்றவாளிகளும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மகளிர் போலீஸ், வழக்கறிஞருக்கு பாராட்டு: மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர்கள் பிரபாதேவி, பரிமளா தேவி, உதவி ஆணையர் திருமேனி, நீதிமன்ற அலுவல் தலைமை காவலர் சுதா ஆகியோருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் பாராட்டு தெரிவித்தார். திறம்பட வாதங்களை முன்வைத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பூர்ணிமாவுக்கும் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

    சட்டப் பிரிவுகள் வாரியாக தண்டனை: முதல் குற்றவாளி மணிகண்டன் மீது சட்ட விரோதமாக கூடுதல், 2 போக்சோ பிரிவுகள், கடத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், போக்சோ முதல் பிரிவுக்கு சாகும்வரை சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 14(1),14(2) போக்சோ பிரிவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, சட்டவிரோதமாக கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கடத்தலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    2-வது குற்றவாளி கார்த்தி மீது 3 போக்சோ பிரிவுகள் உட்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யயப்பட்டன. அதில், முதல் போக்சோவுக்கு சாகும்வரை ஆயுள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், 2-வது போக்சோவுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம், 3-வது போக்சோவுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், சட்டவிரோத கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், அடைத்து வைத்தல், காயப்படுத்துதலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், கடத்தலுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    3-வது குற்றவாளி ஆட்டோ மணிகண்டன் மீது 2 போக்சோ பிரிவு உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் போக்சோவுக்கு சாகும்வரை சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், 2-வது போக்சோவுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், சட்டவிரோத கூடுதலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கடத்தலுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்

    September 15, 2025
    மாநிலம்

    “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    ரயில்கள் மீது கல் எறிபவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை: தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

    September 15, 2025
    மாநிலம்

    திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.​வாசன் அறிவிப்பு

    September 15, 2025
    மாநிலம்

    தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

    September 15, 2025
    மாநிலம்

    விரைவில் 3 எம்எல்ஏக்கள் என்னுடன் வருவார்கள்: ராமதாஸ் நம்பிக்கை

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்
    • விண்டேஜ் சேலை கிராஸுக்குப் பிறகு, AI- உருவாக்கிய கர்பா இன்ஸ்டாகிராமில் வைரலாகத் தெரிகிறது: கூகிள் ஜெமினியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த ரீலை உருவாக்க மேல் கேட்கும் மற்றும் படிப்படியான வழிகாட்டியை சரிபார்க்கவும்
    • ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!
    • இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் ‘கலாம் சபா’ – வி.டில்லிபாபு பெருமிதம்
    • “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.