Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு
    தேசியம்

    ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு

    adminBy adminJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் வலுவான நடவடிக்கையான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க அரசை பாராட்டுகிறேன். பயங்கரவாதத்திற்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் பொறுப்பேற்றது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு உலக நாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாக தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பு இருக்கிறது. எனவே அமெரிக்க வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலும் சேர்க்கிறது. தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி வழங்கவும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.

    லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எஃப் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது, இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே

    July 18, 2025
    தேசியம்

    “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்

    July 18, 2025
    தேசியம்

    இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு

    July 18, 2025
    தேசியம்

    நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவருவது அரசு அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்

    July 18, 2025
    தேசியம்

    குருகிராம் நில விவகார வழக்கில் ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    July 18, 2025
    தேசியம்

    “பிஹாரில் 20 லட்சம் பெண்கள் இப்போது லட்சாதிபதிகள்” – பிரதமர் மோடி பெருமிதம்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாகார்ஜுனாவின் உடற்பயிற்சி மற்றும் உணவு ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது: நடிகர் 65 வயதில் சிறந்த ஒயின் போல வயதை எவ்வாறு நிர்வகிக்கிறார்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே
    • மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்: அதிர்ச்சி ஆடியோ வைரல்
    • வயிற்று புற்றுநோய் ஒரு ஹீட்ட்பர்னுடன் தொடங்கலாம்: எடை இழப்பு ஊசி மற்றும் தொடர்ச்சியான ஹீட் பர்னைப் பயன்படுத்திய பிறகு கண்டறியப்பட்ட பெண் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.