Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஷாட்டைப் பார்த்து  ‘ஷாக்’ ஆன ஸ்டூவர்ட் பிராட்!
    விளையாட்டு

    லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஷாட்டைப் பார்த்து  ‘ஷாக்’ ஆன ஸ்டூவர்ட் பிராட்!

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஷாட்டைப் பார்த்து  ‘ஷாக்’ ஆன ஸ்டூவர்ட் பிராட்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கிய இந்திய அணி 4-ம் நாள் மாலையில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சரிடம் இழந்தது. அந்த ஷாட் தேர்வு படுமோசம் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

    ஏனெனில் ஜோஃப்ரா ஆர்ச்சரே அந்தப் பந்தை முழு உத்வேகத்துடன் வீசவில்லை. அதை லூஸ்னர் என்றே வர்ணனையில் தெரிவித்தனர். அதை புல் ஷாட் ஆடப்போய் பெரிய கொடியாக ஏற்றி சேசிங்கையே பாழாக்கினார் ஜெய்ஸ்வால். இதனையடுத்து இங்கிலாந்து உத்வேகம் பெற்று அன்றே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மறுநாள் ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சிராஜ் சவால் கொடுக்க கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கு அருகில் வந்து பென் ஸ்டோக்ஸ் வயிற்றில் புளியைக் கரைத்து கடைசியில் ஒருவழியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இப்போது 4-வது டெஸ்ட் போட்டிக்குத் இந்திய அணி தயாராகி வருகிறது. பும்ரா இந்தப்போட்டியில் ஆடியே ஆக வேண்டும். ஏனெனில் இது தொடரின் வாழ்வா சாவா போட்டி. இதை விட்டால் தொடரை இழந்து விடுவோம். ஆகவே பேட்டர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜெய்ஸ்வால், இங்கு வங்கதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே வங்கதேசத்தின் 150 கி.மீ வேகம் வீசும் நஹீத் ரானாவிடம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிவேகப் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    அதே போல் இப்போது லார்ட்ஸில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிவேக பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போக்கை ஜெய்ஸ்வால் தவிர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. அன்று மட்டும் அந்த 2-வது இன்னிங்ஸில் அவர் 30-40 ரன்களை அடித்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஜெய்ஸ்வாலின் அவுட் தான் ஆட்டத்தையே இங்கிலாந்து பக்கம் மாற்றி விட்டது.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் ஷாட் குறித்து பேசிய ஸ்டூவர்ட் பிராட், “ஜெய்ஸ்வால் அவுட் ஆன ஷாட் படுமோசமான ஷாட் ஆகும். அந்தப் பந்தை அவர் ஆஃப் சைடில் கட் ஷாட் ஆடியிருந்தால் பவுண்டரிக்குப் பறந்திருக்கும். அவர் தவறாக புல் ஷாட்டைத் தேர்வு செய்தார். அவர் அப்படி அவுட் ஆனவுடன் இங்கிலாந்துக்கான வாய்ப்பைத் திறந்து விட்டுச் சென்றார்.

    ஜெய்ஸ்வால் கிரீசில் இருந்தால் ரன்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒரு குறைந்த ஸ்கோர் இலக்கை எந்த அணியும் தடுக்கும் போதும் சேவாக், வார்னர் போன்ற வீரர்கள் விரைவில் ஆட்டத்தை நம்மிடமிருந்து பறித்துச் சென்று விடுவார்கள். 60 ரன்களை விக்கெட் விழாமல் இவர்கள் போன்ற வீரர்கள் எடுத்தார்கள் என்றால் அதன் பிறகு வெற்றி சுலபமாகி விடும். ஜெய்ஸ்வால் விக்கெட் அத்தகைய விக்கெட்.

    அவர் ஆட்டமிழந்தவுடன் கருண் நாயர் வந்தார். அவர் பந்தை அதற்குரிய மரியாதையைக் கொடுத்து ஆடுபவர். இதனையடுத்து அவரைக் கட்டுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் அட்டாக்கிங் களவியூகத்தை மேற்கொண்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் போயின. ஆகவே ஜெய்ஸ்வால் வீழ்ந்த அந்தத் தருணம் ஆட்டம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது.” இவ்வாறு கூறினார் ஸ்டூவர்ட் பிராட்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    528 பந்துகளில் 1,000 ரன்கள்: அபிஷேக் சர்மா அசத்தல் சாதனை!

    December 3, 2025
    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி!

    December 3, 2025
    விளையாட்டு

    உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

    December 3, 2025
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

    December 3, 2025
    விளையாட்டு

    என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

    December 3, 2025
    விளையாட்டு

    91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2025 இன் மிகப்பெரிய சுகாதாரப் போக்குகள் மற்றும் 2026 இல் என்ன எதிர்பார்க்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவள் பயணம்: சோர்வு, முறிவுகள் அல்லது பெரிய வாழ்க்கை மாற்றங்களுக்குப் பிறகு கருத்தில் கொள்ள வேண்டிய 7 பயணங்கள்
    • உடலில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸை சமாளிக்க உதவும் 3 ஊட்டச்சத்துக்கள்
    • விஞ்ஞானத்தின் படி, ‘உயிருள்ள மிகவும் கவர்ச்சிகரமான பெண்’ இப்படித்தான் இருக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் பூனையை வீட்டில் எவ்வளவு நேரம் பாதுகாப்பாக விட்டுவிடலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.