Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை மாநகராட்சியின் 650 பூங்காக்கள்: ரூ.75 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை
    மாநிலம்

    சென்னை மாநகராட்சியின் 650 பூங்காக்கள்: ரூ.75 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை

    adminBy adminJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை மாநகராட்சியின் 650 பூங்காக்கள்: ரூ.75 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 650 பூங்​காக்​களை ரூ.75 கோடி​யில், 3 ஆண்​டு​களுக்கு பராமரிக்​கும் பணி​ தனியாரிடம் வழங்​கப்பட​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் 2021-ம் ஆண்​டுக்கு முன்பு 704 பூங்​காக்​களும், 610 விளை​யாட்டு அரங்​கு​களும் இருந்​தன. கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.81 கோடி​யில் 204 பூங்​காக்​கள் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளன. ரூ.24 கோடி​யில் 37 பூங்​காக்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

    சென்​னை​யில் தற்​போது 908 பூங்​காக்​களும், 724 விளை​யாட்டு அரங்​கு​களும் பொது​மக்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. மேலும் ரூ.8 கோடி​யில், 32 புதிய பூங்​காக்​கள் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. 2025- 26 நிதி​யாண்​டில் ரூ.60 கோடி​யில் 30 புதிய பூங்காக்கள் அமைக்​கப்பட உள்​ளன. 200-க்​கும் மேற்​பட்ட பூங்​காக்​கள் ரூ.30 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்​ளன.

    மாநக​ராட்சி பூங்​காக்​கள் இதற்கு முன்பு தனி​யார் மூலம் பராமரிக்​கப்​பட்டு வந்​தது. 6 மாதங்​களுக்கு முன்பு பராமரிப்பு ஒப்​பந்​தம் முடிந்த நிலை​யில், மீண்​டும் டெண்​டர் கோரப்​பட்​டு, தற்​போது ரூ.75 கோடி செல​வில், 650 பெரிய பூங்​காக்​களை பராமரிக்​கும் பணி மீண்​டும் தனி​யாரிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

    இதன்​படி, கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 650 பூங்​காக்​களில் தனி​யார் மூலம் பராமரிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஒப்​பந்த நிறு​வனங்​கள் அடுத்த 3 ஆண்​டு​களுக்கு பூங்​காக்​களை பராமரிக்​கும் பணியை மேற்​கொள்ளும். இந்த இடைப்​பட்ட 6 மாத காலத்​தில் என்​யுஎல்​எம் பணி​யாளர்​களை கொண்டு தற்​காலிக​மாக பராமரிக்​கப்​பட்டு வந்​தது.

    தற்​போது வழங்​கப்​பட்​டுள்ள ஒப்​பந்​தத்​தின்​படி, தனி​யார் நிறுவன பராமரிப்​புப் பணி​களில் சுத்​தம் செய்​தல், சீரமைப்பு செய்​தல், தோட்​டக்​கலை செய்​தல், கழிப்​பறை பராமரிப்பு மற்​றும் உள்​கட்​டமைப்பு பழுது​பார்ப்பு போன்ற பணி​கள் அடங்​கும்.

    மேலும், திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார் பேட்டை மற்​றும் ராயபுரம் மண்​டலங்​களில் 42

    பூங்​காக்​களை பராமரிக்கும் ஒப்​பந்​தம் கோரப்​பட்​டுள்​ளது என்று மாநக​ராட்சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்: அதிர்ச்சி ஆடியோ வைரல்

    July 18, 2025
    மாநிலம்

    “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    July 18, 2025
    மாநிலம்

    ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு

    July 18, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு

    July 18, 2025
    மாநிலம்

    புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து: தடையை மீறி தவெக பேனர்

    July 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே
    • மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்: அதிர்ச்சி ஆடியோ வைரல்
    • வயிற்று புற்றுநோய் ஒரு ஹீட்ட்பர்னுடன் தொடங்கலாம்: எடை இழப்பு ஊசி மற்றும் தொடர்ச்சியான ஹீட் பர்னைப் பயன்படுத்திய பிறகு கண்டறியப்பட்ட பெண் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
    • “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.