Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    மாநிலம்

    சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் விவரம்:

    அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு உருவாக்கம், பராமரிப்பு பணிகள், குறிப்பாக, குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவையில் அறிவித்த பணிகளை நிர்ணயித்த காலத்துக்குள் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளான மெட்ரோ ரயில், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிகளில் 3,199 பணிகள், நகராட்சிகளில் 4,972 பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்கி, வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும். அதேபோல, இறுதி கட்டத்தில் இருக்கும் பணிகள், பாதி முடிவுற்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க, மின்வாரியம், குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.

    பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 18, 2025
    மாநிலம்

    வந்தே பாரத் ரயில் முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

    July 18, 2025
    மாநிலம்

    “திமுகவை சீண்டிப் பார்க்க வேண்டும் என்பதே துரை வைகோவின் மனநிலை!” – மனக் குமுறலைக் கொட்டும் மல்லை சத்யா

    July 18, 2025
    மாநிலம்

    தொழில்நுட்ப மேம்பாட்டு பணி ஆக.3, 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது

    July 18, 2025
    மாநிலம்

    செல்ல பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி: மேலாண்மை செய்ய செயலியை உருவாக்கும் மாநகராட்சி

    July 18, 2025
    மாநிலம்

    காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: வீண் விவாதங்களை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தல்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
    • பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    • மாரடைப்பு அறிகுறிகள்: மாரடைப்பால் 9 வயது பெண் இறந்துவிடுகிறாள்; குழந்தைகளில் இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள 5 விஷயங்கள் இங்கே
    • மிசோரத்தில் இருந்து 3,000 அகதிகள் மியான்மர் திரும்பினர்
    • மெஸ்ஸியின் 10-ம் நம்பர் ஜெர்ஸியை அணியும் யாமல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.