Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், துணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

    ரூ.150 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதால் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். இல்லாவிட்டால் ஜூலை 8-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்தோம், இந்நிலையில், தமிழக முதல்வர் ஜூலை 7-ம் தேதி 5 மண்டலத் தலைவர்கள், வரி விதிப்புக் குழு தலைவர், நகரமைப்புக் குழு தலைவர் ஆகியோரின் பதவியை பறித்தார். இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    ஆனால், வழக்கு முறையாக நடக்கவில்லை. சாதாரண பொறுப்பிலுள்ள பில் கலெக்டர், பகுதி நேர ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கண் துடைப்பு நாடகம் போல் தெரிகிறது. உண்மையை கண்டறிந்து நீதியை வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவின் பேரில் அதிமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 8 மாதமாக கிடப்பில் போட்டனர். தற்போது பில் கலெக்டர், ஒப்பந்த பணியாளர்களை மட்டும் கைது செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தவும், ஊழலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி தலைமையில் விசாரணை குழு அமைக்கப் பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இந்த ஊழல் முறைகேட்டில் மத்திய மண்டலத்தில் கணினி பிரிவில் இருந்த ரவி என்பவருக்கு முக்கிய பங்குள்ளது. அவர் இரவோடு இரவாக ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் துணைவியார் மேயரின் உதவியாளராக இருந்துள்ளார். எனவே, ரவியை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க வேண்டும். மாநகராட்சியில் மேயருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. எனவே, மேயரிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் மண்டலத் தலைவர்களின் பினாமி பெயரில் சொத்து குவித்ததையும் கணக்கெடுக்க வேண்டும்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்ற உத்தரவு

    July 18, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: அன்புமணி

    July 18, 2025
    மாநிலம்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேருக்கு 3 ஆண்டு தடை

    July 18, 2025
    மாநிலம்

    சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 18, 2025
    மாநிலம்

    கொடி கம்பங்களை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு

    July 18, 2025
    மாநிலம்

    மாற்று திறனாளிகள் எளிதாக பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி: சென்னை ஐஐடி அறிமுகம்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்ற உத்தரவு
    • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: அன்புமணி
    • நகங்களில் சிறிய வெள்ளை புள்ளிகள் யாவை? சிறந்த செயல்பாட்டு மருத்துவம் இது ஒரு எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம் என்று கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 36,731 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.