Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா
    தேசியம்

    இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ப்பூர்: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அதோடு, 27 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் மிகப் பெரிய விஷயம் எது என்றால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதே.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தன. மோடி பிரதமரான பிறகு, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது அதற்கு எதிராக துல்லிய தாக்குல் நடத்தப்பட்டது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தியை நாம் உலகுக்கு வழங்கி உள்ளோம்.

    கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு 60 கோடி ஏழை மக்களுக்கு கழிப்பறைகள், எரிவாயு, மின்சாரம், இலவச உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது.

    2025ம் ஆண்டு கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாட ஐநா சபை, இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது. சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு இன்று ராஜஸ்தானில் 24 தானிய சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 64 தினை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தி குழுக்களுக்கு மைக்ரோ ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவு அமைச்சகம் 61 புதிய முயற்சிகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த பாடுபட்டுள்ளது.

    ராஜஸ்தான் ஒட்டகங்களின் மாநிலம் என்பதை நாடு அறிந்துள்ளது. ஒட்டக இன பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியையும், கூட்டுறவு சங்கங்களைப் பயன்படுத்தி ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்களை பரிசோதிப்பதையும் நாங்கள் தொடங்கி உள்ளோம். இதனால், வரும் காலத்தில் ஒட்டகங்களின் இருப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு செப்.22-ல் புதிதாக தொடங்கும்: சித்தராமையா அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

    September 12, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் அல்லாமல், டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசு வெடிக்க தடை? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    September 12, 2025
    தேசியம்

    “பிரதமர் மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது, ஆனால்…” – ராகுல் காந்தி கருத்து

    September 12, 2025
    தேசியம்

    டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகளில் சோதனை

    September 12, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: ரூ.7,300 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்காவில் இறப்புக்கான சிறந்த 10 காரணங்கள்: புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் உள்ளன
    • அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து
    • உங்கள் பால்கனி புறா இல்லாத முறைகளை காயப்படுத்தாத முறைகள் இல்லாமல் வைத்திருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!
    • தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை… இப்போது முதலீடு செய்வது சரியா? – ஒரு தெளிவுப் பார்வை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.