Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
    வணிகம்

    விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகச் செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், தென்னை, பருத்தி, வாழை, கரும்பு, நெற்பயிர், புளி, மா, பனை, கீரை வகைகளை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், பெரும்பான்மையான விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி தான் பாரம்பரிய விவசாய தொழிலைச் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வேளாண் பயிர்களை விளைவிக்க பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தனி நபர்களிடம் வட்டியைக் கூட கணக்கு பார்க்காமல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு நீண்ட காலம் ஆகிறது. இந்த கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் ஒவ்வொரு விவசாயியும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் பயிர்க் கடன் பெற பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடன் தொகை வாங்கி வந்த விவசாயிகளு க்கு பொதுத்துறை வங்கிகளில் உடனடி கடன் கிடைக்காததால், தனிநபர் மூலமாகவும், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற வேண்டுமென்றால், பல்வேறு புதிய நிபந்தனைகளை அரசு கொண்டு வந்துள்ளதால் வங்கிக் கடன் தொகையை நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய அறிவிப்புகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்வதற்கும், உரங்கள் வாங்கவும், விதைகள் வாங்கவும், கூலியாட்களுக்குச் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகப் பலரிடம் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    வேளாண் பயிர்களை அறுவடை செய்த பிறகு வாங்கிய கடன்களை அடைத்தாலும், அடுத்த சாகுபடிக்கு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் இன்றளவும் உள்ளது. பயிர்க்கடன் வாங்குவதில் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களையே அதிகமாக நம்புகிறோம்.

    இதில்,கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன்கள் வாங்குவதற்குப் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகள் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி எங்களை நிலைகுலையச் செய்துள்ளது.

    இதில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் போதிய படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தொடர்பான நடைமுறைகள் அறிந்து இருப்பது கடினம். மேலும் விவசாயிகள் தங்களது கடனை தாமதமாகக் கட்டினால், அடுத்த முறை அவர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளி இடங்கள், தனி நபர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனை உடனடியாக நீக்கி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனையை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த விதமான உத்தரவும் எங்களுக்கு வரவில்லை இது தொடர்பாக நாங்களும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் குறித்து எதுவும் கேட்பதில்லை” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிஎன்ஜி பேருந்துகள் மூலம் ரூ.92 லட்சம் சேமிப்பு: தமிழக போக்குவரத்து துறை தகவல்

    July 17, 2025
    வணிகம்

    டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு

    July 16, 2025
    வணிகம்

    இந்தியாவில் டெஸ்லாவின் ‘ஒய்’ மாடல் கார்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் எப்படி?

    July 15, 2025
    வணிகம்

    இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்: மும்பையில் திறந்து வைத்தார் தேவேந்திர பட்னாவிஸ்

    July 15, 2025
    வணிகம்

    உலகலாவிய திறன் மையமாக மாறிவரும் கோவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    July 15, 2025
    வணிகம்

    நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்!

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் அக். 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி
    • பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்
    • ​திருக்​கழுக்​குன்​றம் அருகே நெல் கிடங்கு அமைக்க அனுமதி தருமா அரசு? – விவசாயிகள் எதிர்பார்ப்பு
    • லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
    • திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வசதிகள் எப்படி? – நேரடி விசிட் பார்வை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.