Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»காமராஜர் குறித்து இழிவான பேச்சு – திருச்சி சிவா, திமுக மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்
    மாநிலம்

    காமராஜர் குறித்து இழிவான பேச்சு – திருச்சி சிவா, திமுக மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காமராஜர் குறித்து இழிவான பேச்சு – திருச்சி சிவா, திமுக மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. காமராஜரை இழிவுபடுத்தும் வகையிலான எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது.

    சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, “காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரிகமானவை. காமராஜர் எந்தக் காலத்திலும் ஆடம்பரங்களை விரும்பியதில்லை. முதல்வராகவும், இந்தியாவையே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றிய காமராஜர் நினைத்திருந்தால் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் எளிமையின் வடிவமாகத் தான் வாழ்ந்து மறைந்தார்.

    அதேபோல், காமராஜர் உயிருடன் இருந்த போதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அப்படி இருக்கும் போதே கலைஞரின்ன் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கூறியதாக திருச்சி சிவாவுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை.

    காமராஜர் உயிருடன் இருந்த போதே அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் திமுகவினர் தான். அவர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் அவரை களங்கப்படுத்தும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

    திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்முடி, சில சமூகங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவாவும் அதே போன்று பேசுவதிலிருந்தே திமுக எத்தகைய நாகரிகத்தைக் கடைபிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    திமுக பொதுக்கூட்ட உரை குறித்து நேற்று இரவு அளித்த விளக்கத்தில் கூட, காமராஜர் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறு என்றோ, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவோ திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. அவரை கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. இதிலிருந்தே காமராஜரை திமுக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்

    July 19, 2025
    மாநிலம்

    “என்னை விசாரிக்காமல் சஸ்பெண்ட் செய்ய எப்படி பரிந்துரைக்க முடியும்?” – டிஎஸ்பி சுந்தரேசன்

    July 19, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க இபிஎஸ்-க்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது: திருமாவளவன்

    July 19, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காக ரூ.21.47 கோடி அபராதம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

    July 19, 2025
    மாநிலம்

    சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்

    July 19, 2025
    மாநிலம்

    ஜென்​-ஜி இளைஞர்களை கவரும் வகையில் சூப்பர் சென்னையாக மாற்றும் பிரச்சார இயக்கம்: கிரடாய் தலைவர் தொடங்கி வைத்தார்

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எல்வி’ஸ் லைஃப் பியூயிலிருந்து பாலென்சியாகாவின் குப்பைப் பை வரை: ஆடம்பர பிராண்டுகளால் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் வினோதமான பைகளில் 5
    • ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி
    • ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்
    • 7 பெரும்பாலும் நீரிழிவு நோய்களின் அறிகுறிகளை கவனிக்கவில்லை, இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், முழுக்க முழுக்க நோய்க்கு வழிவகுக்கும்
    • கைப்பற்றப்பட்ட கிரகத்தின் பிறப்பு: புதிதாகப் பிறந்த கிரகத்தின் அரிய காட்சிகளை வானியலாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் சுமார் 1,300 லைட் -ஏர் தொலைவில் – வாட்ச் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.