Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: வேடசந்தூர் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், வேடசந்தூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத குவாரிகளை மூடவும், இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருவோரிடம் பணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, குவாரியின் முன் நுழைவாயில் பூட்டப்பட்டு, பின்வாசல் வழியாக குவாரி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு தரப்பில், விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கிருந்த இயந்திரங்களை சரிபார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

    சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை நடைபெறாமல் இருப்பதற்கான புகைப்படங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன” – திருமாவளவன் கருத்து

    July 17, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

    July 17, 2025
    மாநிலம்

    சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போர் மீது வழக்குப் பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 17, 2025
    மாநிலம்

    காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட காங்கிரஸுக்கு திராணியில்லை: புதுச்சேரி அதிமுக விமர்சனம்

    July 17, 2025
    மாநிலம்

    “அன்புமணி நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம் நல்ல காரியம்” – ராமதாஸ் வாழ்த்து

    July 17, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை. தொடங்குவது உறுதி” – சி.வி.சண்முகம் நம்பிக்கை

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன” – திருமாவளவன் கருத்து
    • கண் புற்றுநோய் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
    • சிலந்திகளை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால் இந்தியாவுக்கு மாற்று வழிகள் உள்ளன: மத்திய அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.