Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிக்னல் கோளாறால் மின்சார ரயில் சேவை பாதிப்பு: விம்கோ நகரில் பயணிகள் போராட்டம்
    மாநிலம்

    சிக்னல் கோளாறால் மின்சார ரயில் சேவை பாதிப்பு: விம்கோ நகரில் பயணிகள் போராட்டம்

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிக்னல் கோளாறால் மின்சார ரயில் சேவை பாதிப்பு: விம்கோ நகரில் பயணிகள் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி பாதையில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ரயிலின் காலதாமதத்தை கண்டித்து, மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விம்கோ நகர் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.20 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில்கள் திருவொற்றியூர், வ.உ.சி நகர், கொருக்குப்பேட்டை ஆகிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதற்கிடையில், விம்கோநகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்வதற்காக, ரயிலை எதிர்பார்த்து, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் 30 நிமிடத்துக்கு மேலாக காத்திருந்தனர். அதேநேரத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து, நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அதிகாரி, திருவொற்றியூரில் நின்ற சூலூர்பேட்டை மின்சார ரயிலை விம்கோ நகர் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த ரயில் விம்கோ நகர் நிலையத்தை அடைந்தபோது, இதை மறித்து பயணிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிக்னல் கோளாறு என கூறி ரயிலை நிறுத்தி வைத்ததை கண்டித்து 15 நிமிடம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆர்.பி.எஃப் போலீஸார், ஜி.ஆர்.பி போலீஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்பட்டதால், சூலூர்பேட்டை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் அவர்கள் ஏறினர். அந்த ரயில் புதன்கிழமை மாலை 4.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.

    இதற்கிடையே, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கத் தொங்கின. மின்சார ரயில் காலதாமதத்தால், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘பாமக, விசிக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்’ – வைகைச் செல்வன்

    July 17, 2025
    மாநிலம்

    மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரி வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    July 17, 2025
    மாநிலம்

    பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களிலும் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிப்பு!

    July 17, 2025
    மாநிலம்

    ‘ரூ.3 லட்சம் பேரம்; ரூ.50 லட்சத்துக்கு விற்பனை’ – நாமக்கல் ‘கிட்னி’ கொள்ளையில் நடவடிக்கை கோரும் அன்புமணி

    July 17, 2025
    மாநிலம்

    ‘வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்’ – காமராஜர் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

    July 17, 2025
    மாநிலம்

    வலுக்கும் ‘ஆட்சியில் பங்கு’ அழுத்தம் – திமுக கூட்டணியிலும் வெடிக்கும் பிரளயம்!

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நம்மில் தட்டம்மை வெடிக்கிறது: காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கோலியின் வீடியோ அழைப்பால் விபரீதம்…’ – பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கர்நாடக அரசு அறிக்கை
    • ‘பாமக, விசிக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்’ – வைகைச் செல்வன்
    • விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
    • அல்சைமர் நோய்: காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் 11 வாழ்க்கை முறை மாற்றங்கள் அதைத் தடுக்க உதவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.