Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு
    மாநிலம்

    ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் / மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே 19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 16-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 7 பேர் ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து

    July 17, 2025
    மாநிலம்

    ஆக.17-ல் ‘மரங்கள் மாநாடு’ – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்

    July 17, 2025
    மாநிலம்

    சென்னை, கோவை, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    July 17, 2025
    மாநிலம்

    பொதுமக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் திமுக அரசு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

    July 17, 2025
    மாநிலம்

    2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்: காங்கிரஸை சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள் – திருச்சி வேலுச்சாமி திட்டவட்டம்

    July 17, 2025
    மாநிலம்

    மதுரையில் ஆகஸ்ட் 25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது
    • ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் காணிக்கை
    • “தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” – விஷால் வலியுறுத்தல்
    • காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து
    • கேரி பிராட்ஷா: ஃபேஷனுக்கு பிடித்த கற்பனையான ஐகானுக்கு ஒரு காதல் கடிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.